பைரட்பே உள்ளிட்ட பல பிரபல இணையவழி கோப்பு பகிர்ந்து கொள்ளும் சேவைகள் இந்தியாவில் சென்ற மாதம் தடை செய்யப்பட்டன. இப்போது சென்னை உயர்நீதி மன்றம் தனது முந்தைய தீர்ப்பை மாற்றியிருக்கிறது.
"முந்தைய நீதிமன்ற உத்தரவு, பதிப்புரிமை வைத்திருப்பவர் குறிப்பிட்ட இணைய தளம் அல்லது இணைய சேவை நிறுவனத்தை மட்டும் குறிப்பிடாமல், பரவலான தடையை கோரும் படி அனுமதித்தது. பயனர்களும், 'முகமிலி' குழுக்களும் விரும்பா விட்டாலும், நீதி மன்ற ஆணையை நடைமுறைப் படுத்துவதைத் தவிர இணைய சேவை நிறுவனங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது."
இப்போதைய ஆணையின்படி, ஒரு கோப்பு பகிர்ந்து கொள்ளப்படுவதை தடுக்க குறிப்பிட்ட சுட்டியை மட்டும் தடுத்தால் போதுமானது. "இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு பதிவு செய்த மேல் முறையீட்டை தொடர்ந்து இந்த புதிய ஆணை வழங்கப்பட்டது."
(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக விவாதங்கள் நடக்கின்றன).