ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வேலூரில் தகவல் தொழில் நுட்ப சாத்தியங்கள் கருத்தரங்கின் பரிந்துரைகள்.

  1. வேலூரில் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்குத் தேவையான மூன்று அடிப்படை காரணிகள் - மனித வளம், கட்டமைப்பு வசதிகள், செயல்திட்டம்

    a.  தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை திரட்டித் தொகுக்க வேண்டும்.
    b.  மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பராமரிக்க வேண்டும்.
  2. வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான 20 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

    a. பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் வேலூருக்கு வர வைக்கலாம்.
    b. நகரத்தில் ஒரு தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
  3. தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். விஐடி இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    a. வேலூரில் அலுவலகம் ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் ஆரம்ப அலுவலக வசதி, வழிகாட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும்.
    b. மாவட்டத்தில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு பொது அமைப்பு இருக்க வேண்டும்.
    c. அரசாங்கத் திட்டங்களை தொழில் முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
  4. வேலூர் மாவட்டத்தின் சிறப்புப் பண்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் நிறுவனங்களை ஈர்க்கலாம்.

    a. வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். தோல் துறை நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
    b. சிறிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல் திட்டம் வகுக்கலாம்.
    c. சிறு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும்.
  5. அரசு கொள்கைகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.

    a. சிறு நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்க அரசு அங்கீகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
    b. மாவட்ட தொழில் மையத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி வசதிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும்.
    c. வேலூர் நகராட்சி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க சேவை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் (விஐடியின் நிறுவன உருவாக்கச் சேவையைப் போன்று)
ஆங்கிலத்தில்

Recommendations of panel on Vellore as IT destination. 

1. Three necessary factors to enable IT sector in Vellore
a. Human Resources
b. Physical Infrastructure
c. Action plan

Collect and compile database of professionals from Vellore district working in different parts of the world. 
Prepare a database of Engineering colleges in the district and maintain details of students studying and passing out each year.

2. Prepare a 20 years vision document for IT sector in the district. 
a. Encourage Tier II units of companies operating in larger cities to locate in Vellore
b. Establish an IT SEZ in the city.

3. Set up a IT facilities center to help companies looking to establish base in Vellore. VIT can play a major role in this.
a. Soft landing option for companies by providing office infrastructure and initial guidance for setting up base here. 
b. A forum for IT companies in the district to meet and discuss development issues
c. Co-ordinating with government departments to make funds available to entrepreneurs. 

4. Identify unique selling points of Vellore district to promote as an IT destination. 
a. Information Technology needs of industry in the district should be identified and served. Leather sector, Self Help Groups, Educational Institutions can be the target markets
b. Focus on encouraging and facilitating small companies. Set a target of setting up 500 small companies in the city in 5 years time. 
c. Set up the IT SEZ targetting small and medium companies. 

5. A supportive and encouraging government policy is to be prepared and implemented. 
a. Provide recognition to small companies to enable them compete globally.
b. Create an IT division in the District Industrial Center to provide guidance and support with available schemes
c. Encourage new initiatives in the sector through industry forums. 
d. Establish a technology business incubation center by the municipal government (similar to VIT technology incubator)

வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்

இந்து நாளிதழில் செய்தி

வேலூரில் தகவல் தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு கோட்டை மைதானத்தில் நடந்து வரும் நூலாறு 2010 புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறப்பாகவும் செறிவாகவும் நடந்தது.

சென்னை கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஏ ஜே பாலசுப்ரமணியன் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு போன்று தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிற நகரங்களைப் பற்றி விளக்கினார்.

மனிதத் திட்டமிடலில் ஒரு பூங்காவை உருவாக்கலாம், ஆனால் காடு ஒன்று இயற்கையாகத்தான் உருவாக முடியும்.

  • பெங்களூருவில் 1950-60களில் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்போதைய பிரதம மந்திரி நேருவினால் உருவாக்கப்பட்டன. 
  • 1980களில் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டது. 
இப்படி உருவான ஒரு தொழில் நுட்பச் சூழலில் பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவற்றுடன் பெங்களூருவின் கட்டமைப்புகளும் காலநிலைகளும் இளைஞர்களுக்கு விருப்பமாக அமைந்திருந்தன.

தகவல் தொழில் நுட்பத் துறைக்கான சூழல் உருவாக மூன்று காரணிகள் தேவை:

  1. மனிதவளம்
  2. கட்டமைப்பு
  3. வாழ்க்கைத் தரம்

பெங்களூருவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சியினால் அந்த நகரத்தின் வசதிகள் சிக்கலாகி வந்தன. வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்கள் பெங்களூருக்கு அருகில் இருந்த சென்னையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

இப்போது சென்னையும் அத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது. வேலூரைப் பொறுத்த வரை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைச் செலவு இரண்டுமே ஆதாயமாக இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஊர்களில் சென்று பணி புரிகிறார்கள்.

  • இது போன்று வேலூர் பகுதியிலிருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்களின் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
  • இந்தப் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுத்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.
  • வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரும் போது வெளியூரிலிருந்து பல நிபுணர்கள் வல்லுனர்கள் வர வேண்டியிருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைச்சூழல் இருக்க வேண்டும்.
  • குழந்தைகள் படிப்பதற்கு நல்ல கல்லூரிகள், பள்ளிகள் இருக்க வேண்டும்.
  • சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் இங்கு ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
  • கருத்துக்களும் பேச்சுக்களும் செயல்திட்டமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 
  • 15 முதல் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் திட்டம் வகுத்து தொலைநோக்குடன் செயல்பட்டால் சாத்தியமாகும்.

சிறிய அளவில் செயல்பட்டாலும்உலகத் தரத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் வல்லமைகளைப் பயன்படுத்தி சிறப்படைய வேண்டும்.

வேலூர் விஐடி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க மையத்தின் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் பேசும் போது கோயம்புத்தூரின் வளர்ச்சியைப் பற்றி விளக்கினார். லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஆரம்பித்த பிறகு அதைச் சார்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்  உருவாயின. அதிலிருந்து ஒரு தொழில் முனைவு கலாச்சாரம் ஏற்பட்டது. இது போன்று எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் முனைவுதான் அடிப்படை.

ஏற்கனவே பிற நகரங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு வேலூரில் செலவு குறைவு ஆதாயம் இருக்கிறது.

சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் இழப்பு 12% முதல் 15% வரையாக இருக்கிறது. ஹனிவெல் நிறுவனம் சோதனை முயற்சியாக மதுரையில் 500 பொறியியல் பட்டதாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில், ஊழியர் இழப்பு வீதம் 5%த்தை விடக் குறைவாக இருக்கிறதாம்.
இது போன்று வேலூரிலும் சிறு நகர வாழ்க்கையில் நல்ல சம்பளமும் குடும்பத்துடன் வசிக்கும் வாய்ப்பும் இருந்தால் ஊழியர்கள் நிறைவுடனும் ஊக்கத்துடனும் பணி புரிவார்கள்.

பெரிய நிறுவனம் ஒன்று வேலூருக்கு வரும் போது அவர்களுக்கு soft landing என்ற குறைந்த செலவில் அலுவலகம் ஏற்படுத்தும் வசதி இருப்பது பெரிய ஆதாயமாக இருக்கும்.

விஐடியின் தொழில்நுட்ப உருவாக்க மையத்தை அப்படி தொடர்பு கொண்டு கிரான்ஸ்கி மோல்டிங் அண்ட் ஸ்டாம்பிங் என்ற ஜெர்மன் நிறுவனம், விஐடி மையத்தில் தனது பணிகளை செய்ய ஆரம்பித்து அப்போது பள்ளிகொண்டா அருகில் தனது தொழிற்சாலையை ஏற்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களைப் போலவே டாக்ஸ் பிரெஸ்ஸோடெக்னிக் என்ற நிறுவனமும் விஐடி மையத்தில் செயல்பாடுகளை ஆரம்பித்து இப்போது தொழிற்சாலைக்கான நிலம் வாங்கி தயார் நிலையில் இருக்கிறார்கள். வீலன்ட் என்ற மூன்றாவது ஜெர்மன் நிறுவனம் தொழில் சாதக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  • இது போன்று நிறுவனங்கள் soft landing ஆவதற்கான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • விஐடி மையம் அரசாங்கத் திட்டங்களின் மூலம் தொழில் முனைவோருக்குப் பண உதவி செய்து வருகிறது. இது வரை ஒரு கோடியே 20 லட்சம் வரை முதலீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரியும் ஒவ்வொரு ஊழியரும் சுற்றுப் புறப் பகுதிகளில் 4 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தொழில் ஆதாயங்களைப் பயன்படுத்தி தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவத்தை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களையும் பண உதவிகளையும் பயன்படுத்த விஐடி உதவி புரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புது நிறுவன உதவி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 1000 மையங்கள் என்று இலக்கு ஏற்படுத்தப்பட்டு அது வரை சிறு எண்ணிக்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1 $ முதலீடு அரசாங்கத்துக்கு 4$ வருமானம் தருகிறது. வேலூர் நகராட்சி கூட ஒரு இன்குபேட்டர் ஏற்படுத்தலாம்.


மைக்ரோசாப்ட் இந்திய ஆராய்ச்சி மையத்தில் பன்மொழி அமைப்பு ஆராய்ச்சியின் தலைவராக பணிபுரியும் முனைவர் குமரன் மனிதவளம், கட்டமைப்பு, செயல்திறன் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றைத் தாண்டி நிறுவனங்களை வர வைக்க துணிந்து முயற்சி எடுக்கும் (ரிஸ்க் எடுக்கும்) மனோபாவம் உருவாக வேண்டும்.

கலிஃபோர்னியாவில் இருந்த அதே சூழல் போஸ்டனில் இருந்தாலும், கலிஃபோர்னியர்களின் ரிஸ்க் எடுக்கும் மனப்போக்குதான் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. அதே போன்று வேலூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சிறப்பு கவர்ச்சி ஒன்று அடையாளம் காணப்பட வேண்டும்.

15-20 ஆண்டுகளுக்கான நீண்ட காலத் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.

நாராயண்

தொடக்க நிலை நிறுவனங்கள் வெற்றி பெற தொழில் முனைவர்களின், சமூகத்தின் மனப்பாங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்காமல் சிறிய நிறுவனத்தில் பணி புரியும் மனப்போக்கு வேண்டும்.

சென்னையில் வாகன உற்பத்தித் துறை வளர்ந்ததற்கான முக்கிய ஒரு காரணி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் உருவாகி செயல்படுவதுதான். அதைப் போல வேலூரிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறு நிறுவனங்கள் வளர்வது தகுந்த சூழல் உருவாக உதவியாக இருக்கும்.

தொழில் முனைவர்களைப் பொறுத்த வரை, இணையம் மூலமாக cloud computing என்ற கோட்பாட்டின் மூலமாக சேவை வழங்குவதற்கு இருப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய ஊர்களிலிருந்து கூட அவற்றை உருவாக்கி உலகமெங்கும் விற்பனை செய்யலாம்.

விஐடி வேலூரில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. செலவு குறைவாக இருப்பது இன்னொரு காரணம். இந்த ஊரில் இருக்கும் தேவைகளுக்கு சேவைகள் உருவாக்கி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படலாம்.

செந்தில்நாதன்

1. சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று உறுதியான நேர்மையான தலைமையும் தனிநபர் முயற்சிகளும் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும், முனைவும் இருந்தால்தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும்.

2. பெங்களூரு சென்னை நகரங்களின் நிழலில் அந்நகரங்களுக்கு மனித வளத்தை அளிக்கும் பகுதியாக விளங்குகிறது வேலூர் மாவட்டம்.

3. இன்னொரு பெங்களூரு சென்னையாக உருவாகாமல், வேலூரின் தனிச் சிறப்புகளைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

4. 500 சிறு நிறுவனங்களை வேலூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு அமைத்துச் செயல்படலாம்.

நாச்சியப்பா
ஆம்பூர் வர்த்தக மையத்தைப் போன்று ஒரு தகவல் தொழில் நுட்ப மையம் வேலூரில் உருவாக வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வும், நிறுவனங்களுக்கு வசதியும் கிடைக்கும். தொழில் முனைவர்கள் சந்தித்து உரையாட ஒரு பொது இடமும், தகவல் பரிமாறும் வசதியும் கிடைக்கும்.

தோல் துறை, கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் இவர்களுக்குத் தேவையான மென்பொருள் சேவை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன.

பாலாஜி கம்பியூட்டர்சைச் சேர்ந்த திரு குமரன் 

அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான அரசு அமைப்புகள் ஏற்படுத்தவும் முன்முயற்சி தேவை என்று கருத்து தெரிவித்தார்.

வேலூரில் மனிதவளம், தொழில் முனைவு இருக்கிறது. அரசு அங்கீகாரமும், உதவிகளும், வழிகாட்டலும் தேவையாக இருக்கிறது.


விஐடி இது போன்று மென்பொருள் தகவல் மையம் ஒன்றை உருவாக்க முன்வரலாம். ஏற்கனவே 50-60 பிபிஓ நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்

தங்களது பல வேலைகளுக்கிடையே இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களையும், வேலூரின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்து வரும் வேலூர் தகவல் தொழில் நுட்ப அமைப்பினரையும், தொழில் முனைவர்களையும், அரசு அதிகாரிகளையும் இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கருத்தரங்கின் நோக்கம், சிறு நகராகக் கருதப்படும் வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கான சூழல்களைப் பற்றிய ஒரு ஆரோக்கியமான கருத்தாக்கத்தைத் தொடங்கி வைப்பது.  இது தொடர்பாக சில தகவல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அரசியல் பிரநிதிகள், அமைச்சர்களின் முன் முயற்சிகளினாலும் வேலூரில் ஒரு ஐடி பார்க் அமைப்பதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கின்றன.

2. வேலூர் இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கும் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கும் சென்னைக்கும் நடுவில் strategic ஆக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் நான்கு வழி நெடுஞ்சாலை, வேலூரிலிருந்து இந்த பெருநகரங்களுக்குப் போய் வருவதை இரண்டு மணி நேரங்களுக்குட்பட்ட பயணமாக குறுக்கியிருக்கிறது.

சென்னைக்கும் வேலூருக்கும் இடையேயான தூரம் நூற்றிச் சொச்சம் கிலோமீட்டர்களாக இருந்தாலும், வேலூர் சென்னையிலிருந்து கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை எந்த அளவு ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான பொருள்.

இதைப் பற்றி வழிகாட்டப் போகிறவர் தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு A J பாலசுப்பிரமணியன். 1985ல் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று அடுத்த 12 ஆண்டுகளில் அப்பளைட் டாடா சிஸ்டம்ஸ் மற்றும் ஹார்ட் சாஃப்ட் மைக்ரோஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மூத்த பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் என்ற 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராக செயல்படுகிறார்.

3. வேலூரின் மகுடத்தில் கோகினூர் வைரமாக மின்னும் விஐடியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் இன்று நம்மிடையே தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். திரு பாலச்சந்திரன் 20 ஆண்டுகளுக்கும் மேல் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்து வருகிறார். விஐடி டெக்னாலஜி இன்குபேஷன் மையத்தை ஆரம்பித்ததிலிருந்து (2003 ஆம் ஆண்டு) அதன் பொறுப்பாளராக இருந்து 20 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டலும், உதவியும் செய்திருக்கிறார்.

4. தகவல் தொழில் நுட்பம் என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்கு மட்டும் என்றில்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் சூழலுக்கேற்ற, நமது தேவைகளை பூர்த்தி செய்யும் படி பயன்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதைப் பற்றி,  அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி புரிந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான பன்மொழி கணினி அமைப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் குமரன் பேச இருக்கிறார். முனைவர் குமரன் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, அமெரிக்காவில் பெல் கம்யூனிகேஷன், ஆரக்கிள் கார்பொரேஷன் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் இந்திய ஆராய்ச்சிப் பிரிவின் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

5. வேலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் திரு மோதிலால் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

வேலூரில் புதிதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கி வரும் திரு நாராயண் தனது கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த திரு நாராயண், கடந்த 10 ஆண்டுகளில் விண்ஊஞ்சல், 360 டிகிரி இன்டர்ஆக்டிவ் என்று புதுமையான மென்பொருள் நிறுவனங்களை தொடங்கி நடத்திய பெருமை உடையவர்.

6. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடுதல், காலணி முதலான தோல் பொருட்கள் உற்பத்தி என்று ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான கோடி அன்னியச் செலாவணி ஈட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தோல் துறைக்கு மென்பொருள் சேவை அளிப்பதற்காக பிஎஸ்ஜி லெதர் லிங்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நான் இந்த கருத்தரங்களை தொகுத்தளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

இந்த மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலூர் நகரிலும் டார்லிங் குழுமம் போன்ற வணிக நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

7. முத்தாய்ப்பாக வேலூர் நண்பர்களின் ஊர் பாசம். நூலாறு 2010 என்ற தலைப்பில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி ஒன்றை இந்த மாவட்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று அரும் சாதனையைச் செய்து கொண்டிருக்கும் ஆழி அறக்கட்டளையின் திரு செந்தில்நாதன்,  இந்தக் கருத்தரங்கில் தமது பங்களிப்பை வளங்குவார்.

முதலில் பேச்சாளர்கள் தத்தமது ஆரம்ப உரையை 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் உருவில் விவாதம் தொடரும்.

இந்த விவாதம் ஒலி/ஒளி வடிவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் விளைவாக ஒரு செயல்திட்டம் உருவாக்கி வெளியிடுவது என்பது நோக்கம்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

தமிழில் இணையப் பயன்பாடுகள்

இப்போதைய பயன்பாடுகள்

  1. தமிழ்மணம், தமிழிஷ் இரண்டும் தமிழுக்காகவே இணையத்தில் உருவாகி பயன்படுத்தப்படுகின்றன.
  2. 1990களில் மன்றமையம் என்ற forumhub தமிழ் விவாதங்களுக்குப் பயன்பட்டது
  3. மதுரைத் திட்டம் என்று தமிழ் மின்னூல் திட்டம் web 2.0 நாட்களிலும் web 0.5 வடிவத்திலேயே செயல்பட்டு வருகிறது.
  4. யாஹூ, கூகுள் மடற்குழு சேவைகளைப் பயன்படுத்தி தமிழ் மடற்குழுக்கள் இயங்குகின்றன.
  5. தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், இணைய இதழ்கள் பல செயல்படுகின்றன.
  6. தமிழ் நூலகம் (சென்னை நூலகம்), புத்தக விற்பனைத் தளங்கள் சில இருக்கின்றன.
  7. கூகுளில் தமிழ் இணையத் தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது
  8. http://thevaaram.org/ 
    http://www.noolaham.net
    தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியும் கருதத் தக்கது.

ஆங்கிலத்தில் பயன்படும் ஆனால் தமிழில் இன்னமும் இல்லாத பயன்பாடுகள்

  1. அமேசான் போன்ற பொதுவான விற்பனைத் தளம்
  2. ஃபேஸ்புக் அல்லது லிங்க்ட்இன் அல்லது ஆர்குட் போன்று உறவுகளை வளர்க்க உதவும் பயன்பாடுகள். இப்போது இருப்பதை தமிழர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழர் சமூகத்துக்குப் பொருத்தமாக உருவாக்கினால்?
  3. செய்தி விவாதத் தளங்கள் - slashdot.org போல
  4. திசை காட்டும் சேவைகள் - google maps போல?
  5. ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றச் சேவை - google voice போல?

தமிழ் சமூக வளர்ச்சிக்கு என்று தனியாக உருவாக்கும் சாத்தியங்கள்

  1. ஐந்திணைகள் சார்ந்து நிலவரைபடம் உருவாக்குதல்
  2. தமிழக வரலாற்றைத் தொகுக்கும் ஒரு விக்கி பயன்பாடு. இதில் தமிழ் அறிந்தவர்கள் எளிதில் பயன்படுத்தும்படியான இடைமுகம் இருக்க வேண்டும்.

இன்னும் நமது கலாச்சாரத்தை மட்டும் சார்ந்த பயன்பாடுகள் நாம்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதற்கு ஆர்வமே இருக்காது.

தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

செப்டம்பர் 28ம் தேதி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலுக்கான குறிப்புகள்.

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் மென்பொருள் பயன்பாடுகள் தேவையா? என்ற கேள்வி முதலில் எழும். தொழில் நிறுவனங்களையும், நிறுவனங்களின் செயல்பாடுகளின் பிரிவுகளையும் பார்த்து இதற்கு விடை சொல்ல முயற்சிக்கலாம்.

தமிழில் மென்பொருட்களுக்கான சந்தை - தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற தமிழ் பேசும், தமிழ் அலுவல் மொழியாக இன்னும் இருந்து வரும் நாடுகளில் இருக்கிறது.

மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.

நிறுவன வகைப்பாடுகள்

  • பெரிய நிறுவனங்கள், ஏற்கனவே மென்பொருள் பயன்பாடுகளை பெருமளவு பயன்படுத்துபவர்கள். இந்த மென்பொருள் பயன்பாடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • நடுத்தர நிறுவனங்கள், நிறுவனத்தில் சில செயல்பாடுகளுக்கு மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள். இவையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • சிறு நிறுவனங்கள். நிறுவன மேலாண்மைக்கு மென்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள். 

செயல்பாட்டுப் பிரிவுகள்

  • கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல்
  • பொருள் வரத்து, செலவு, சரக்குக் கையிருப்பு
  • இயந்திரங்கள் பராமரிப்பு, உதிரிப் பாகங்கள்
  • ஊழியர் வருகைப்பதிவு, சம்பளப் பட்டியல், பணி வாழ்க்கை விபரங்கள்
  • உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு
  • ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை மேலாண்மை
  • விற்பனையாளர்களுடனும் வாடிக்கையாளருடனும் தகவல் பரிமாற்றம்
இன்றைய நிலைமை என்ன என்று பார்ப்போம். 


  1. கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல் எல்லா நிறுவனங்களுக்குமே மென்பொருள் பயன்பாட்டில் செய்யப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். நடுத்தர நிறுவனங்களில் சொந்தமாக டேலி வாங்கி நிறுவிக் கொள்கிறார்கள். சின்ன நிறுவனங்களின் கணக்காளர்/தணிக்கையாளர் விபரங்களை வாங்கி அவர்களது அலுவலக டேலி மென்பொருளில் உள்ளிட்டு அறிக்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

    இப்படி எல்லா நிறுவனங்களுமே கணினி வழி பயன்பாட்டில் போனதற்கு முக்கிய காரணம், அரசாங்க விதிமுறைகளும், அதைப் பின்பற்ற வேண்டியதற்கான தேவைகளும் டேலி போன்ற மென்பொருட்களில் பூர்த்தியாவதால்தான்.
  2. வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மின்னஞ்சல் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்
  3. ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்க மிகக் குறைந்த அளவில் மைக்ரோசாப்டு ஆஃபிஸ் பயன்பாட்டில் வார்ப்புருக்கள் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களைத் தவிர்த்த பிற நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் பொதுவாக மென்பொருள் பயன்பாடுகளை ஒரு செலவினமாகத்தான் பார்க்கிறார்கள் - முதலீடாக பார்ப்பதில்லை. அதனால், அரசாங்க சட்டங்கள், வாடிக்கையாளர் தேவை என்று கட்டாயம் வந்தால் தவிர கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் முதலீடு செய்வதில்லை.

மென்பொருள் பயன்பாடுகளின் பலன்களை நேரடியாக நிறுவன உரிமையாளர்களும் தலைமை மேலாளர்களும் பயன்படுத்தி உணர முடியாததால், தரவு உள்ளிட சில ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கும் ஊழியர் மூலமாகவே மென்பொருள் தேவைகளை எடை போடுகிறார்கள்.

நிறுவன உரிமையாளர்களும், தலைமை மேலாளர்களும் நேரடியாக மென்பொருள் பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பெரிய தடைகள்

  1. பயனர் இடைமுக மொழி தமிழில் இல்லாமல் இருப்பது
  2. பயன்பாட்டின் வடிவமைப்பு அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது. 

என்ன தீர்வு?

இந்த இரண்டுக்கும் தீர்வு காண, நம்ம ஊரின் தேவைகளுக்கேற்ப புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.

கூகுள் தேடல் வந்து ஏற்கனவே கல்லா கட்டிக் கொண்டிருந்த யாஹூவையும் அல்டாவிஸ்டாவையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது போல, ஜிமெயில் மூலமாக மற்ற இணையப் பக்கவழி மென்பொருள் சேவையில் முந்தி விட்டது போல நம்ம ஊர் சூழலிலும் புதிய ஒரு மென்பொருள், பயனர்களுக்கு ஏற்றபடி செயல்படும் வடிவமைப்புடன் வந்தால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டேலி போன்றவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடலாம்.

எந்த மாதிரியான துறைகள் இருக்கின்றன:

  1. முதன்மைத் துறை
    விவசாயம், மீன்பிடித்தல், தோட்டத் துறை, சுரங்கத் துறை
  2. தொழில் துறை
    உற்பத்தி நிறுவனங்கள் - வாகன உற்பத்தி, காலணி உற்பத்தி, விளையாட்டுப் பொருட்கள் செய்வது போன்றவை
  3. processing நிறுவனங்கள் - சாயமூட்டும் தொழிற்சாலை, அச்சுத் தொழில் போன்றவை, தோல் பதனிடுதல்
  4. சேவைத் துறைகள்
    விற்பனைக் கடைகள் - கட்டிடப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துக் கடை, தின்பண்டக் கடை, துணிக்கடை, ஃபேன்ஸி கடைகள், பால்,
  5. சேவை நிலையங்கள்
    உணவகங்கள், தங்கும் விடுதிகள், துரித அஞ்சல் சேவைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், திரைப்பட அரங்குகள்
  6. திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம், தரகு வியாபாரம், கட்டுமானத் துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்

இந்தச் சந்தையின் அளவு என்ன?
ஒரு ஒப்பீடு

தமிழ் நாட்டின் மக்கள் தொகை - 70 மில்லியன்
தமிழ் நாட்டின் மென்பொருள் சந்தை மதிப்பு - 5 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி, உள்ளூர் நுகர்வு???

அமெரிக்காவின் மக்கள் தொகை - 300 மில்லியன்
அமெரிக்காவின் மென்பொருள் சந்தை மதிப்பு - 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தலைக்கு 450 டாலர்கள் = 20000 ரூபாய்கள்)

இத்தனை கோடி மதிப்பிலான மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு விற்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இது ஏற்கனவே தயாராக இருக்கும் சந்தை இல்லை. இதில் இறங்குபவர் துணிந்து பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சந்தையை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஏற வேண்டிய மலைகள்

மென்பொருள் பணிச்சூழல் ஒன்று உருவாக்க வேண்டியிருக்கும்

1. தொழில்/வணிக நிறுவனங்களுக்கான மென்பொருள் பயன்பாட்டுக்கான கணினி வடிவமைப்பு
2. தொழில் வணிக நிறுவனங்களுக்கான  மென்பொருள் பயன்பாடுகளை இயக்கத் தேவையான இயங்குதளம்
3. மென்பொருள் பயன்பாடுகள் பல
பயன்பாடுகளுக்குத்தான் கணினி வாங்குகிறார்கள்

விற்பனை வழிமுறைகள்

  1. பெட்டியில் பயன்பாடு - கணினி பயன்படுத்தாத அல்லது மற்ற கணினிகளை விட்டுப் புதுக்கணினியில் பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பெட்டியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் பயன்பாடு செயல்படும்படியான வசதி
  2. கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் குறுந்தகடு
  3. கணினியில் மாயச் சூழலில் பயன்பாடு - குறுவட்டு ஒன்றில் பயன்பாடு இயங்கத் தேவையான சூழல் மென்பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி வினியோகித்தால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தை பாதிக்காமல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கலாம்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

வேலூரில் தகவல் நுட்பத் துறை கருத்தரங்கம்

வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் - கருத்தரங்கு

நாள் - செப்டம்பர் 4, 2010
நேரம் - மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் - வேலூர் கோட்டை மைதானம், நூலாறு புத்தகக் கண்காட்சியின் பகுதியாக

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும் சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.

மாவட்டத் தலைநகராக, ஒரு சிறுநகராக கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?

சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன எதிர்பார்ப்பார்கள்?

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான தகவல் தொழில் நுட்பத் தேவைகள் இருக்கின்றன?

இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்

1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனிதவளம் பற்றிய தகவல்கள் - மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி
2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் - சென்னை/பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி
3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச் சாத்தியங்கள் - வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரிதிநிதி
4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் - மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி
5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தேவைகள் - வேலூரைச் சார்ந்த வணிக /தொழில் நிறுவனப் பிரதிநிதி
6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் - தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்.

என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.

மென்பொருள் சுதந்திரதினம்

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்று கேட்டால் இந்தியர் எல்லோருக்கும் விடை தெரியும் (தெரிந்திருக்க வேண்டும் என்று நம்பிக்கை :-) 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்.

இந்தச் சுதந்திரத்தின் பிறகு நாம் ஏற்படுத்திக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளும் கடமைகளும் நமக்கு அரசியல், சமூக தளங்களில் கிடைத்திருக்கின்றன.

அதே போல, நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா?  20ம் நூற்றாண்டின்  தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான கணினி உலகில் நமது உரிமைகள் எப்படி இருக்கின்றன? என்னென்ன அடிமைத் தளைகள் இருக்கின்றன?

'நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் தொடர்பான நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வணிக நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக நாம் கட்டுண்டிருக்கிறோம்' என்பது நம்மில் பலருக்குச் செய்தியாக இருக்கலாம்.

பயன்படுத்துபவர்கள், மாணவர்கள், மென்பொருள் துறையினரின் உரிமைகளைப் பறித்து தமது ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள முயலும் வணிக நிறுவனங்களுக்கு  (கிழக்கிந்திய கம்பெனி நினைவு வருகிறதா?) எதிராக போராட்டக் கொடி ஏற்றி, நமது உரிமைகளை மீட்டுத் தருவதற்காக 1980களிலிருந்தே உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

மென்பொருள் துறையின் வல்லுனர்கள் பலர் கட்டற்ற, மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிட்டு, பராமரித்து, மேம்படுத்தி வருகிறார்கள். வணிக நிறுவனங்களின் கட்டுத்தளைகளுடனான மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன.

இந்தக் கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

நோக்கம்
எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது.

குறிக்கோள்கள்
  • மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது
  • மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
  • எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது
  • உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல்
  • இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து  செயல்படுதல். 
சென்னையில் மென்பொருள் சுதந்திரதினம்
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை (http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil) பிரிவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கும் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் செப்டம்பர் 18ம் நாள் நடக்கும்.

1. இதில் கலந்து கொள்ள பொதுமக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும், கணினி ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது பற்றித் தெரிந்து கொள்ள  இந்த என்ற வலைப்பக்கத்தைப் பாருங்கள்.

2. சென்னைக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் தத்தமது பகுதியில் மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யலாம். உங்கள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை  இந்தத் தளத்தில் பகிர்ந்து கொண்டால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்.

நமது கணினியில் இயங்கும் மென்பொருட்களை கட்டிப் போட்டுள்ள தளைகளை உடைத்து எறிவோம்.
எல்லோரும் பங்கேற்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சமூகத்தை உருவாக்குவோம். 


மென்பொருள் வணிகக் கட்டுகளுக்குச் சாவுமணி

சனி, 14 ஆகஸ்ட், 2010

சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.

சென்னை லினக்சு குழுவின் மாதாந்திரக் கூட்டங்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொண்டதில்லை. சனிக்கிழமை, நிறுவன வேலை நாளாக இருந்ததாலும், மற்ற பொறுப்புகளுக்கு இடையிலும் சனிக்கிழமை பிற்பகலில் கூட்டத்துக்குப் போவது நடக்காததாகவே போயிருந்தது. சமீபத்திய மாற்றங்களினால் இந்த அழுத்தங்கள் குறைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கூட்டத்துக்குப் போய்ச் சேருவது:

பேருந்தில் ஏறி ஐஐடிக்கு முன்பு இறங்கிய பிறகு விண்வெளி பொறியியல் துறை (aerospace engineering) வரை போய்ச் சேருவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நுழைவாயிலிலிருந்து 'கஜேந்திரா சர்க்கிள இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் சார், அதோ நிற்கும் வேனில் ஏறினால் கொண்டு விட்டு விடுவார்கள்' என்று வாயிற் காவலர் வழி காட்டினார்.

வேன் வந்து புறப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்தே போக வேண்டும். வேனில் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு யானை சிலைகள் வைக்கப்பட்ட ரவுண்டானாவில் இறங்க வேண்டும். அதுதான் கஜேந்திரா சர்க்கிள்.

(நினைவில் இருப்பது) வேன் வந்த பாதையைத் தவிர்த்து மூன்று சாலைகள் பிரிந்து போகின்றன. வலது புறம் திரும்ப வேண்டும். மின், மின்னணுவியல் (electrical department) துறை என்ற திசையில் நடந்து கொஞ்ச தூரத்துக்குப் பிறகு பயன்பாட்டு இயந்திரவியல் (applied mechanics) என்ற சாலையில் திரும்ப வேண்டும். பயன்பாட்டு இயந்திரவியல் கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் புதிய கட்டிடம் விண்வெளி பொறியியல் துறையுடையது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் மட்டும்தான் பெயர் எழுதியிருந்தது பார்க்கக் கிடைத்தது.

போகும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.

ராமன் லினக்சில் கோப்பு அனுமதிகள் குறித்து பேச ஆரம்பித்திருந்தார்.

-- பயனர்(u), குழு(g), பிறர்(o) என்று மூன்று பிரிவினருக்கு அனுமதிகள் மாற்றலாம்
-- படித்தல்(r), மாற்றுதல்(w), இயக்குதல்(x) என்று மூன்று வகை அனுமதிகளை கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்.

-- ls -l மூலம் ஒரு கோப்பின் அனுமதி விபரங்களை பார்க்கலாம்.
-- அனுமதி விபரங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கு மூன்று கட்டங்களாக ஒன்பது கட்டங்களில் காட்டப்படுகிறது (உதாரணம் : r-xrw-r--). முதல் மூன்று கட்டங்கள் பயனருக்கு உள்ள அனுமதிகள், அடுத்த மூன்று கட்டங்கள் குழுவிற்கான அனுமதிகள், கடைசி மூன்று கட்டங்கள் மற்றவர்களுக்கான அனுமதிகள்.

-- லினக்சில் எல்லாமே கோப்புகள்தான்
-- கோப்பு, அடைவு, கருவி என்று காட்டுவதற்கு அனுமதி விபரங்களுக்கு முந்தைய கட்டம் பயன்படுகிறது (- என்றால் சாதாரண கோப்பு, d என்றால் அடைவு, c என்றால் கேரக்டர் டிவைஸ், b என்றால் பிளாக் டிவைஸ், l என்றால் லிங்க்)

--chmod பயன்படுத்தி அனுமதிகளை மாற்றலாம். பயனர் பிரிவு (u, g, o), + (சேர்) / - (நீக்கு), அனுமதி வகை (rwx). (உதாரணம் : chmod u+rw கோப்பு)
--இன்னொரு முறையில் எண்கணக்கு மூலம் மாற்றலாம். r=4, w=2, x=1 என்ற கணக்கில் கூட்டி என்ன அனுமதிகள் என்று அமைக்கலாம். (உதாரணம் : chmod 666 கோப்பு)

ஸ்டிக்கி பிட்  மற்றும் இயக்கப்படும் கோப்பு உரிமையாளரின் (setuid) அனுமதிகளுடனேயே இயங்கும் உத்தி பற்றியும் விளக்கினார்.

என்னதான் மேனுவல் (man) பக்கங்களைப் படித்தாலும், எத்தனை புத்தகங்களை புரட்டினாலும், ஒருவர் உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லும் போது மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த வகையில் மிகவும் பலனுள்ள அமர்வு.

சந்திரசேகர் பாபு - ரூபி கணிமொழி குறித்துப் பேசினார்.

பேர்ல், ஷெல் நிரல்கள், ஜாவா, பைதன் என்று பல மொழிகளில் பணி புரிந்த இவர் ரூபி மொழி, தான் அறிந்த மொழிகளில் இனிதானது என்று மிகச்சிறப்பாக விளக்கினார். 'பேர்ல், ஷெல் நிரல்களால் செய்யக் கூடிய பணிகளை ரூபியில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்' என்பது பேச்சின் குறிக்கோளாக இருந்தது.

மென்பொருள் இயல் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி நிறைய எடுத்துக்காட்டுகள், அனுபவப் பகிர்வுகள், சரளமான பேச்சு, நட்பு தவளும் புன்னகை சேர்த்து நேரம் போவது தெரியாமல் விறுவிறுப்பாக இருந்தது இந்த அமர்வு.

  • ரூபி என்பது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த நிரல் மொழி (object oriented language). ரூபி மொழியில் எண்கள் (integer), சொற்றொடர்கள் (strings) கூட பொருட்களாகத்தான் கருதப்படுகின்றன.


  • நிரல் எழுதுவது அழகாக இருக்க வேண்டும், நிரலை பராமரிப்பது எளிமையாக இருக்க வேண்டும் என்பது ரூபியின் குறிக்கோள்.
  • ரூபியை வெறும் இணையப் பயன்பாட்டு நிரல்மொழியாக நினைக்க வேண்டாம். அது ஒரு பொதுப் பயன்பாட்டு நிரல்மொழி.

பேசும் போதே எடுத்துக்காட்டு செயலிகளாக ஷெல் நிரல், பேர்ல், ரூபி மூன்றிலும் எழுதி இயக்கிக் காட்டினார். இடையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக, தெளிவாக, எளிமையாக பதிலளித்தார். நேரம் கடந்து போனதை சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் அவ்வளவு நேரம் ஓடிப் போனது உறைத்தது.

சுகி வெங்கட், அவரது நிறுவனத்தில் உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ள மல்டி ஃப்ளோ பற்றிப் பேசினார்.

ஃபயர்ஃபாக்சின் சூல் (xul) சட்டகத்தில், ஜாவாஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுப்பியில் பன்மொழி இடைமுகம், கணிதக் குறியீடுகள் சேர்ப்பது என்று வசதிகள் இருக்கின்றன. ஒருவர் இத்தகைய படைப்பை உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவர் கேட்டுக் கொண்டது போல பயனர்களாகவும், நிரலாளர்களாகவும் மற்றவர்களும் பங்கேற்று இதை மேம்படுத்த முடிந்தால் சிறப்பான ஒரு மென்பொருளாக உருப்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடத்த உத்தேசித்துள்ள மென்பொருள் சுதந்திர நாள் (software freedom day) முன் தயாரிப்புகளைக் குறித்து ஸ்ரீனி, தியாகராஜன், ராமன் அறிவித்தார்கள். 'யார் யார் எத்தனை கடைகள் அமைக்கப் போகிறார்கள், பணிகளைச் செய்வதற்கு தன்னார்வலர்கள்' என்று பட்டியல் தயாரித்தார்கள்.

'நிகழ்ச்சிக்கு முந்தைய மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொடர்பு வேலைகளைப்' பற்றிக் கேட்ட என்னிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அருண் SAG, ஸ்ரீனிவாசன், சுரேஷ், நாகராஜன், சத்யநாராயணன், அகிலன் ஆகியோர் இதில் சேர்ந்து கொண்டோம்.
  • சென்னையில் வெளியாகும் தமிழ் நாளிதழ்கள் (தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன்),
  • ஆங்கில நாளிதழ்கள் (தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா),
  • கணினி பத்திரிகைகள் (தமிழ் கம்ப்யூட்டர், லினக்சு ஃபார் யூ),
  • தமிழ் பத்திரிகைகள் (ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்),
  • பண்பலை வானொலிகள் (சூரியன், மிர்ச்சி, ஆஹா, பிக், ரேடியோ சிட்டி)
    போன்ற எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல்களை முன் கூட்டிய அனுப்பி வைப்பது

  • sfd2010.ilugc.in என்ற தளத்தில் நிகழ்வு பற்றிய விபரங்களை தொகுத்து அளித்தல்
  • டிவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற இணைய தளங்களில் தகவலை பரப்புவது
  • வலைப்பதிவர்களில் விழிப்புணர்வு உருவாக்குவது
  • கல்லூரி, பள்ளிகளுக்கு விபரங்களை அனுப்புவது..
என்று பல வழிகளில் மென்பொருள் சுதந்திரம் குறித்த தகவலை பரப்பி நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க வேண்டும்.

இவற்றைத் தவிர
- தமிழக அரசின் எல்காட்
- c-dac
- nrcfoss
போன்ற மென்பொருள் தொடர்பான அரசு துறைகளை அதிகாரபூர்வமாக பங்கேற்க அழைக்கலாம்.

சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்காமல், கட்டற்ற மென்பொருளில் ஆர்வம் உடைய அதற்கான பணிகளை செய்த தலைவர்களையும் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள்) வருகை தர அழைக்கலாம்.

லினக்சு பயிற்சி நிறுவனங்கள், லினக்சு சேவை நிறுவனங்கள், கணினி விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றை அணுகி அவர்களின் பங்களிப்பையும் கேட்கலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

விறு விறுவென்று நடக்கட்டும்

அடுத்ததாக சோதனை வழிகளை பட்டியலிடுவது. (Test Cases)
  1. எல்லா விபரங்களையும் பொருத்தமாக உள்ளிட்டால் சரியாக சேமிக்கப்பட்டு அறிக்கைப் பக்கத்தில் காண்பிக்கிறதா?
  2. வாடிக்கையாளர் பட்டியலில் விற்பனையாளர் பெயரைக் காண்பிக்கக் கூடாது.
  3. பொருளின் பெயரைக் குறிப்பிடாமல் உள்ளிட முயன்றால் என்ன நடக்கிறது/
என்று நூற்றுக் கணக்கில் எழுதிக் கொள்ள வேண்டும். எத்தனை சோதனைவழிகளைக் குறிப்பிடுகிறோமோ அத்தனை நம்பிக்கையுடன் மென்பொருளை வெளியிட முடியும்.

இனிமேல் நிரல் எழுதுவது. (Coding)

ஜாவா குருக்கள், பிஎச்பி பிஸ்துகள், டாட்நெட் தாதாக்கள் இறங்கி விளையாட வேண்டிய கட்டம். ஒரே வரையறையை ஒருவர் 200 வரிகளில் செய்து காட்டலாம், இன்னொருவர் முப்பது வரிகளில் முடித்து விடலாம். கவிதை எழுதுவது போல, ஓவியம் வரைவது போல கணிமொழியின் கூறுகளை எப்படிப் பயன்படுத்தி அழகான நிரல் எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்து விடும் ஒன்று கிடையாது.

அடுத்ததாக எழுதியதை நிரலாளரே ஒரு தடவை சரிபார்த்து விட்டு சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இங்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குழு இருக்க வேண்டும். இவர்கள் அனுமதித்தால்தான் வெளியே எந்த பதிப்பும் போக வேண்டும். மேலே பட்டியலிடப்பட்ட சோதனை வழிகளுடன் கூடவே அவர்களும் தமக்குத் தோன்றிய முறைகளில் சோதிப்பார்கள். (Unit Testing)

ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் புதிய கூறு சேர்த்தல் அல்லது மாறுதல் செய்தால் இந்தப் பகுதியைச் சோதித்ததோடு இல்லாமல் பிற பகுதிகளையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது போல ஒரு மூலையில் ஏதோ மாற்றப் போக இன்னொரு மூலையில் புட்டுக் கொள்ளும் அபாயம் எப்போதுமே இருக்கும். அதை அடையாளம் கண்டு சரி செய்வதும் திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். (Integration Testing)

இப்படி உருவான நிரலை ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு அல்லது புதிதாக நிறுவ வேண்டிய இடத்துக்கு எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொதி போடுதல் (Packaging) அடுத்தக் கட்டம். என்னென்ன கோப்புகள், என்னென்ன நிரல்கள் என்று ஒரு பொதியாகப் பொதிந்து அதை பிரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் நிரலையும் இணைத்து வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர் (Service Team) கையில் போகும்.

அவர்கள் முன்னெச்சரிக்கையாக அலுவலகத்திலேயே இருக்கும் அந்த வாடிக்கையாளரின் தற்போதைய நிரல் தொகுப்பின் இந்த மாறுதல்களை ஓட்டிப் பார்த்து சிக்கல் எதுவும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளரின் கணினி இணையத்தில் இணைந்திருந்தால் அப்படி இணைந்தோ, அல்லது நேரடியாகப் போயோ இந்த மாறுதல்களை அவர்களது கணினியில் ஏற்றி விடுகிறோம்,.

'என்னென்ன மாற்றியிருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்' என்று விளக்கி விட்டு அவர்களிடம் ஒரு புரிதல் அத்தாட்சி வாங்கிக் கொண்டு வந்து விடுவோம்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த ஆரம்பித்து சரியான பின்னூட்டம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் சின்ன ஐயங்களை தொலைபேசியிலும், இன்னும் சிக்கலானதை மின்னஞ்சல் மூலம் மாற்றம் அனுப்பியோ, நேரிலோ தீர்த்து வைக்கிறோம்.

வேலையில் இறங்குவோம்

இதற்கு வழிமுறையாக
  • நிறுனப் பெயர்களை, வணிக விபரங்களை ஒவ்வொரு முறையும் உள்ளிடத் தேவையில்லாமல் ஒரு பொதுவான இடத்தில் (master) போடச் சொல்லி, தேவை விபர உள்ளிடலில் தேர்ந்தெடுக்க வைப்போம்.

  • இதே போன்று பொருள் பட்டியல் (product master), நிறப்பட்டியல் (colour master) போன்றவற்றுக்கும் பொதுவான பட்டியல் உருவாக்கிக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறோம்.

  • நாளை இந்த வடிவத்தில் உள்ளிடச் சொல்வோம்.
  • அளவுக்கு என்ன அலகைப் பயன்படுத்த வேண்டும், விலைக்கு எந்த நாட்டுப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வாங்க வேண்டும்.
இப்படி தொழில் நுட்பமுறைகளைத் தீர்மானித்த பிறகு தரவுத் தள வடிவமைப்பில் இறங்க வேண்டும்.
  1. வாடிக்கையாளர், விற்பனையாளர், வங்கி, என்று யாராக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்கும், முகவரி இருக்கும், நம்முடன் என்ன உறவு என்று இருக்கும்.
    எனவே வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று தனித்தனி இடத்தில் சேமிக்காமல் ஒரே இடத்தில் எல்லா பெயர்களையும் வைத்துக் கொண்டு அவர்களது முகவரி விபரங்களுக்கு ஒரு பட்டியும் (table), உறவு விபரங்களுக்கு (relationships) இன்னொரு பட்டியும் உருவாக்குவோம் என்று தீர்மானிக்கிறோம்.



  2. தேவை விபரம் (order details) உள்வாங்கும் போது வாங்குபவர் (Buyer) என்ற உறவு இருக்கும் நிறுவனப் பெயர்களை மட்டும் எடுத்துக் காட்டி அந்தத் தேவை விபரங்கள் பட்டியில் அந்த உறவுக்கான எண்ணை மட்டும் சேமித்து வைப்போம்.
    தேவைப்படும் போது இந்த மூன்று பட்டிகளையும் இணைத்து வாடிக்கையாளர் நிறுவனப் பெயரை எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறோம்.

  3. வணிக விபரங்களை (commercial details) ஒரு பட்டியில் போட்டு ஒரு வரிசை எண் (Serial Id) உருவாக்கி, இன்னொரு பட்டியில் பல்வேறு பொருட்களின் விபரங்களையும், அளவு, நாள் விபரங்களையும் சேமிப்போம் என்று முடிவு செய்கிறோம்.

  4. விலை விபரங்கள் (price details) குறிப்பிட்ட மேலாளர்களுக்கு மட்டும்தான் தெரிய வேண்டும் என்று இருப்பதால் தரவுத் தள அளவிலேயே விலையைத் தனிப் பட்டியில் சேமித்துக் கொள்வோம்.
    பயன்பாட்டு நிரலிலோ (application program), தரவுத் தளக் கருவிகள் (database tools) மூலமாகவோ விலை விபரங்களை யார் பார்க்கலாம் என்று கட்டுப்படுத்த முடிந்தாலும் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காக தனிப் பட்டியில் சேமிப்போம்.
இப்படி பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த வடிவமைப்பு முடிவுகளில் சரி தவறு என்று எதுவும் இல்லை. எது அதிகப் பொருத்தமானது என்றுதான் சிந்திக்க வேண்டும். அதனால் வேலை எப்போதுமே முழுமையாக முடிந்து விடாது, அதற்காகக் காத்திருக்கவும் கூடாது, ஆனால் செய்த வேலையை மேம்படுத்துவதையும் நிறுத்தி விடக் கூடாது.

நிரலில் என்னென்ன நிரல்செயலிகள் எழுத வேண்டும், தரவுத் தளத்துடன் இணைய, உள்ளிட, வெளியெடுக்கத் தேவையான செயலிகளை ஒரு தொகுப்பாகவும் (Database Class), பக்கக் கூறுகளை காட்ட ஒரு தொகுப்பு (Page Class), படிவப் பகுதிகளைக் காட்ட ஒரு தொகுப்பு (Form Class) என்று முடிவு செய்கிறோம்.

மென்பொருள் உருவாக்கம்

ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வந்த தோல் தேவை விபரங்களை (purchase order) உள்வாங்கிச் சேமிக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.

இதற்கான வழிமுறைகள்:
  1. இடைமுக வடிவம்
  • வாடிக்கையாளர் நிறுவனப் பெயர் (company name)
  • அவர்களது முகவரி, (address)
  • அவர்களிடம் பணம் வாங்கும் முறைமை (payment term)
  • பொருளை அனுப்பும் முறைமை (shipment term)
  • பொருளை அனுப்பும் வழி, (shipment mode)
  • சேர வேண்டிய துறைமுகம் (port of destination)
  • தேவை நாள், (order date)
  • வந்து சேர்ந்த விபரம் (order reference)
போன்ற வணிக விபரங்களை வாங்க வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் வாங்கப் போகும் பொருளின் விபரங்களை உள் வாங்க வேண்டும்.
  • பொருளின் பெயர் (தோல் வகையின் பெயர்),
  • அதன் பண்புகள் (நிறம், தடிமன், அளவு, தரம்),
  • எவ்வளவு சதுர அடி வேண்டும்,
  • என்ன விலை,
  • என்றைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,
  • இது போக தரக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்,
  • முன்மாதிரி அனுப்பும் தேவை குறித்த குறிப்புகள்
இவற்றை சேமிக்க வேண்டும்.

ஒரு பக்கத்தின் மேற்பகுதியில் பொதுவான வணிக விபரங்களையும், கீழ்ப்பகுதியில் ஏழெட்டு பொருள் விபரங்களை உள்ளிடும் வசதியும் கொடுக்க வேண்டும்.
  • விபரங்களை உள்ளிட்டு சேமித்த பிறகு, உறுதிப்படுத்தலாக விபரங்களை வெளியிலெடுத்துக் காண்பிக்க ஒரு அறிக்கை
  • இதுவரை உள்ளிட்டு இன்னும் பொருள் அனுப்பி வைக்கப்படாத தேவைகளைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்த எல்லா தேவைகளின் விபரங்களைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்து பொருள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் விபரங்கள்
என்று அறிக்கைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

இதுதான் தேவையான மென்பொருளின் வடிவம்.

இதற்கான படிவங்களை உருவாக்கி, அறிக்கைகளின் படம் போட்டு பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரிடம் காண்பித்தால் அவர் தனது கருத்துக்களைச் சொல்லலாம். அதன் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்த பிறகு, நுட்ப விபர ஆவணம் எழுத ஆரம்பிக்கலாம்.

கதையின் தொடர்ச்சி

உரிமையாளர்களுக்கு உடனடிப் பலன் கிடைக்கும் விதமாக மென்பொருள் திட்டம் கிடைத்து விட்டது.

ஆனால், மென்பொருளை உருவாக்கிய பிறகு எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதில் சுணக்கங்கள். முன் அனுபவம் இல்லாததால் 'மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த வைத்து பலன் வருவது வரை எங்கள் பொறுப்பு அதற்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள்' என்று பேசியதில், முடியவே செய்யாத பொறுப்புகளை எடுக்க வேண்டி வந்தது.

அப்படி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்ததில் மென்பொருள் ஒரு விற்பனைப் பொருளாக முழுமை அடைந்தது. கிட்டத்தட்ட 20 நிறுவனங்களில் நிறுவிச் செய்து கொடுத்ததலில் பல நுணுக்கங்கள் இடம் பெற்று விட்டன.

இனிமேல்
  • செய்யும் வேலைக்கு சரியாக காசு வாங்கி,வேலை செய்யும் ஊழியருக்கு மென்பொருள் துறையில் பொதுவாக கிடைக்கும் அளவுக்கு ஊதியம் வழங்கி சேவை அளிக்க வேண்டும்.
  • அதற்கு வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என்று அலசி,
  • இதைச் செய்தால் இவ்வளவு ஆதாயம் கிடைக்கலாம். அதைச் செய்ய எங்களுக்கு இவ்வளவு செலவாகும் என்று பேச ஆரம்பித்ததும்
வழி மலர்ந்து விட்டது.

இந்த எல்லா மாற்றங்களுக்கிடையேயும்,
  • நிறுவனங்களை இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும்,
  • வீணான நேர விரயங்களைத் தவிர்த்தல்
  • ஒரே விபரத்தைத் திரும்பத் திரும்ப உள்ளிடுவதால் வரும் தவறுகளை தவிர்த்தல்,
  • எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்டவர்கள் விபரங்களைப் பார்க்கும் வசதி
என்ற அடிப்படை நோக்கங்கள் வடிவமைப்பில் இடம் பிடித்துக் கொண்டிருந்தன.

இடைமுகம் பல மொழிகளிலும் மாற்றும் வசதி இருக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் கொண்டோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

ஆரம்பப் பணிகள்

தோல் வாங்குபவர்களும் விற்பவர்களும் தமது ஆர்டர்களை, விற்பனை விபரங்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியைச் உருவாக்கினோம்.
  • ஒரு தோல் நிறுவனம் தமது வாடிக்கையாளர் தேவை விபரங்களை உள்ளிட்டு, அதன் தொடர்பான உற்பத்தித் தகவல்கள், அதன் அடிப்படையில் அனுப்பி வைக்கும் தோலின் விபரங்கள் போன்றவற்றையும் உள்ளிடலாம்.
  • தோல் நிறுவனத்தின் மேலாளர்களும் ஊழியர்களும் தமக்குத் தேவையான அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • என்னென்ன ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, குறிப்பிட்ட கால கட்டத்தில் என்னென்ன அனுப்பி வைத்தோம் போன்ற விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • தோல் வாங்குபவர்களுக்கும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தமக்குத் தேவையான, அனுமதிக்கப்பட்ட விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • வாடிக்கையாளர் உள் நுழைந்து தனது தேவை விபரங்களைக் குறிப்பிட்டு விட்டால் வேளியே மின்னஞ்சல் மூலமாகவே தொலை நகல் மூலமாகவே தனி தகவல் அனுப்பத் தேவையில்லை.
அடுத்தக் கட்டத்தில் இதே வாடிக்கையாளர் தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் மென்பொருள் சேவையில் சேர்த்து விட்டால், தனது தோல் வாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கையாளலாம்.

மென்பொருளை ஒரு இணையக் கணினியில் நிறுவி யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு உருவாக்கித் தருகிறோம் அதற்கு மாதம் தோறும் சேவைக் கட்டணம் கொடுத்து விடுங்கள் என்பதுதான் திட்டம்.

நடைமுறை தேர்வுகள்

நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் இருக்கலாம் என்று பார்த்தோம்.

எங்கள் மென்பொருளுக்கு பயனர் இடைமுகமாக இணைய உலாவியைப் (web browser) பயன்படுத்துகிறோம். 2000ம் ஆண்டிலேயே இணையத்தின் மூலமாக சேவைகள் வழங்குவது சூடுபிடிக்கும் காலத்துக்கு முன்பே எங்களுக்கு இது போன்று எந்தக் கணினியிலும் போய் நமது பயன்பாட்டை இயக்க முயலும் வசதி கவர்ச்சியாக இருந்தது.

நமது மென்பொருளை இயக்க ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தால் மற்ற கணினிகள் வலைப்பின்னல் மூலம் இணைந்து கொள்ளலாம். இயங்குதளம் (OS), கணிமொழியை(Programming Language) ஒரே கணினியில் நி'றுவிக் கொண்டால் போதும். பயனர் கணினிகளில் அவர்களுக்குப் பிடித்த இயங்குதளம் போட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு இணைய உலாவி மட்டும் இருந்தால் போதும்.

இப்படி யோசித்து எச்டிஎம்எல் (html) எனப்படும் மீயுரை கணிமொழியை உலாவிக்கு அனுப்பி இடைமுகம் காட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தோம். பின் ஆண்டுகளில் அந்தத் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்து இப்போது பல வசதிகளை இணைய உலாவி மூலமாகவும் கொடுக்க முடிகிறது.

தரவுத் தளமும் (database) இயங்குதளமும்(OS) திறவூற்று (open source) மென்பொருளாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆரக்கிள் தரவுத் தளம் அல்லது மைக்ரோசாப்டு எஸ்கியூஎல் தரவுத் தளம் என்று போனால் வாடிக்கையாளர்கள் அந்த மென்பொருட்களின் உரிமம் வாங்கவும் தனியாகக் காசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

இயங்கு தளத்தைப் பொறுத்த வரை இணையத்தின் மூலம் இந்தப் பயன்பாடு இயங்க வேண்டியிருப்பதால் லினக்சுதான் பாதுகாப்பு, நம்பகத்தன்மை அடிப்படையில் பொருத்தமானது என்று முடிவு செய்தோம்.

தரவுத் தளத்தையும் பயனர் இடைமுகத்தையும் இணைக்கும் நடு அடுக்குக்கு, அப்பச்சே இணைய வழங்கியுடன் இணைந்த பிஎச்பி என்று கணிநிரல் மொழியை தேர்ந்தெடுத்தோம். இந்தத் தேர்வு கொஞ்சம் பலவீனமான ஒன்றுதான். ஆனால் மென்பொருள் பின்னணி இல்லாத யாரும் ஆரம்ப காலத்தில் இல்லாததால், உள்ளதில் எளிதாக நிரல் எழுத முடியும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

லெதர்லிங்க் எனப்படும் தோல்இணை பயன்பாட்டின் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை போன்றவற்றுக்கு அடிப்படையாக ஏற்படுத்திய தரவுத் தள வடிவமைப்பு (database design) காரணமாக இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் வழி முறைகள்

இந்த வடிவமைப்புக் கூறுகளை வரையறுத்தல் இரண்டாவது படி.

நுட்பவரையறை ஆவணம் (technical documentation) என்ற ஆவணத்தில்
  • பணியின் நோக்கம் என்ன,
  • எந்த முறையில் இதை உருவாக்கப் போகிறோம்,
  • தரவுத் தளத்தை எப்படி வடிவமைக்க வேண்டும்,
  • இடைமொழியை எப்படி எழுத வேண்டும்,
  • இவ்வளவும் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும்
என்ற திட்டமிடல்களையும் வடிவமைப்புகளையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதை எழுதி முடித்தவர் தனது அணியின் இன்னொரு உறுப்பினரிடம் அதைக் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கும் நிரல் எழுதுவதை ஆரம்பிக்கும் முன்னரே நன்கு சிந்தித்து எழுதி வைத்துக் கொள்வதால் பின்னால் நேர விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். வேலையில் இறங்கிய பிறகு மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கான தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம்.

இப்படி வடிவமைத்த திட்டமிட்ட மென்பொருளை உருவாக்கிய பிறகு அதை எப்படி எப்படி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வரையறுக்க வேண்டும், இது மூன்றாவது படி. இந்த சோதனை வழிகள் ஆவணத்தின் (Test Cases Document) அடிப்படையில்தான் சோதனை அணியினர் (Testing Team) உருவாக்கிய மென்பொருளை சரி பார்ப்பார்கள்.

புதிய தேவையைப் புரிந்து வடிவமைத்து வல்லுனருக்குத்தான் இதை இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். அவரே அதையும் குறிப்பிட்டு விடுவது பொருத்தமாக இருக்கிறது.

நான்காவதாக, நிரல் எழுதுவது.

ஒரு மென்பொருள் உருவாக்கலில் இந்த நிரல் எழுதுவதின் பங்கு 20-30 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என்று எனது மதிப்பீடு. இந்த 20-30% மதிப்புக் குறைந்த பணிகள் செய்வதற்குத்தான் ஜாவா, டாட்நெட், விபி என்று சுற்றிக் கொண்டிருக்க நேர்கிறது.

ஐந்தாவதாக எழுதிய நிரலை சரி பார்த்து சோதனை அணியிடம் ஒப்படைப்பது. அவர்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கும் சோதனை வழிகளை அடிப்படையாகக் கொண்டு எல்லா திசைகளிலும் சோதித்துப் பார்ப்பார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை வெளியே வந்தால் அது நிரல் எழுதியவரிடம் திரும்பிப் போய் சரி செய்யப்பட வேண்டும். மென்பொருள் வடிவமைப்பிலேயே பிரச்சனை இருந்தால் அதைக் கூட மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம்.

ஐந்தாவது படியான தர நிர்ணயத்திலேயே (Quality Control), எழுதப்பட்ட நிரலை சக பணியாளர் படித்து விமரிசனம் செய்யும் நிரல் விமரிசனம் (Code Review) என்பதும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

கடைசியாக தேவையை ஆரம்பித்து வைத்தவர் இந்த இறுதி வெளிப்பாட்டைப் பார்த்து தனது ஒப்புதலை அளிக்கிறார்.

சமையல் முடிந்து விட்டது, சாப்பாடு தயார். சாப்பிட வைக்க வேண்டுமே. தயாரான நிரல்களை, மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு போய் நிறுவுதல், அங்கு பயனர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்கள் கேட்கும் மாற்றங்களைக் குறித்துக் கொள்ளுதல், அவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற செயல்படுத்தல் மிகப் பெரிய பங்கு.

அதைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் இறுதி விளைவை, நன்மைகளை ஏற்கனவே பேசியிருந்தபடி காண்பித்து காசைக் கையில் வாங்குவதோடு பணி முடிகிறது.

மூன்று முகங்கள்

இது போன்ற நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் (layers) இருக்கும்.
  • விபரங்களை உள்ளிட படிவங்கள், விபரங்களை அறிக்கைகளாகப் பார்க்கும் பக்கங்கள் அடங்கிய பயனர் இடைமுகம் (User Interface).
  • உள்ளிட்ட விபரங்களைச் சேமித்து வைத்து, தேவைப்படும் போது வெளியே கொடுக்கும் தரவுத் தளம் (Database).
  • இரண்டையும் இணைக்கும் வண்ணம், படிவங்களிலிருந்து தரவுகளை எடுத்து தரவுத் தளத்தில் போடுவது, தரவுத் தளத்திலிருந்து தேவையான வடிவில் தகவல்களைத் திரட்டி இடைமுகத்துக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடைபயன்முகம். (Application Layer)
வாடிக்கையாளரிடம் ஒப்புதல் வாங்குவதற்கு பயனர் இடைமுக மாதிரிகளைக் காண்பித்தால் போதுமானது.

அடுத்ததாக,
  • அந்த தகவல்களை எப்படி சேமிக்கப் போகிறோம்,
  • எப்படி வெளியே எடுக்கப் போகிறோம்,
  • என்னென்ன காரண காரியங்களின் (logic) அடிப்படையில் இயக்கப் போகிறோம்
போன்ற வழிமுறைகளில் பெருமளவு நேரம் செலவளித்தால்தான் மென்பொருளின் பயன்பாட்டு நன்மையும் எளிமையும் சிறப்பாக அமையும்.

பொதுவாக விபி (VB) போன்ற பொம்மை இடைமுக மென்பொருள் உருவாக்க முறையில் (GUI development tools) படிவத்தில் என்ன வரிசையில் தகவல்கள் வாங்கப்படுகின்றனவோ அதே அடிப்படையில் தரவுத் தளத்தில் சேமித்துக் கொள்ளும் போக்கு சோம்பேறி மென்பொருள் நிரலர்களிடம் (programmers) இருக்கும்.

  • பயனருக்கு எப்படிக் காண்பித்தால் வசதியாக இருக்கும் என்பதைப் பொறுத்து பயனர் இடைமுகம் அமைய வேண்டும்.
  • தரவுத் தளத்தில் எப்படிச் சேமித்து வைத்தால், தகவல் இழப்பு, பலமுறை ஒரே தகவல் சேமிப்பு இல்லாமல் மிகக் குறைந்த முயற்சியில் உள்ளிடுதலும், சேமித்தலும் வெளி எடுத்து காட்டுதலும் செய்ய முடியும் என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்பு அமைய வேண்டும்.
  • எந்த வழிமுறையில் வேகமாக, குறைந்த கணினி ஆற்றலைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளே அனுப்பவும், வெளியே எடுக்கவும் என்பதைப் பொறுத்து இடைபயன்முகம் அமைய வேண்டும்.

எதுக்காக எல்லாம்

மென்பொருள் உருவாக்கும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

(இப்படித்தான் என்றில்லாமல் இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் நிறுவனம் ஒன்றில் தொழில் முறையாக மென்பொருள் உருவாக்கும் போது இந்த ஒழுக்கங்கள் உதவுகின்றன என்று அனுபவம்.)

முதலில் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை
  • வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாலோ
  • அல்லது விற்பனைப் பிரிவினர் சொல்லும் ஆலோசனையின் அடிப்படையிலோ
  • அல்லது நிறுவனத்தில் துறையின் போக்கு புரிந்த ஒருவரின் பரிந்துரையாலோ
ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரே வாடிக்கையாளருக்குச் செய்து மென்பொருளை அவருக்கே கொடுத்து விடுவது project எனப்படும் குத்தகை வேலை முறை.

ஒரு மென்பொருளை உருவாக்கி பல வாடிக்கையாளருக்கு விற்று, அது தொடர்பான சேவைகளையும் வழங்குவது product எனப்படும் மென்பொருள் உருவாக்கி விற்கும் வேலை முறை.

எங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெருமளவு சிறு குறு நிறுவனங்கள். லட்சக் கணக்கில் பணமும் நேரமும் செலவழித்து மென்பொருள் தேவையை விளக்குவதில் கூட ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனால், ஆரம்ப காலத்தில், புதிய கூறுகள் எங்கள் திட்டத்தின் பேரில் உருவாக்கப்பட்டன. முதல் வாடிக்கையாளர் கிடைத்த பிறகு அவர்கள் கேட்கும் தேவைகளை உருவாக்கிக் கொடுத்து மேம்படுத்திக் கொண்டோம். நான்கைந்து வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும் போது எல்லோருக்கும் பொதுவில் உருவாக்கி பொருளை மேம்படுத்த முயன்றோம்.

தேவையை வரையறுக்க,
  • எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும் என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),
  • எப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக வேண்டும் என்று மாதிரிகள் (report templates),
  • என்னென்ன ஆவணங்கள் அச்செடுக்க வேண்டும் என்று மாதிரிகள் (document templates)
உருவாக்கிக் கொள்ளுவது உத்தமம்.

முதலில் யார் அந்தத் தேவையை கிளப்பினார்களோ அவருக்கு இந்த மாதிரிகளைக் காட்டி,
'இதுதானே நீங்கள் கேட்டது' என்று உறுதி செய்து கொண்டால் பின்னர் மறு வேலைகள், நேர விரயங்களைத் குறைத்துக் கொள்ளலாம். .

சின்னச் சின்ன மாறுதல்களில் கூட இப்படி மாதிரிகளில் படமாகக் காட்டும் போது சொன்னவர் சொன்ன நோக்கும் கேட்டவர் புரிந்த நோக்கும் வெவ்வேறாக இருப்பது வெளி வந்து விடுகிறது. அப்போதே புரிதலை சரி செய்து கொண்டு விட்டால், பின்னர் முழுமையாக வடிவமைத்து நிரல் எழுதிய பிறகு மாற்றங்களைச் செய்யும் விரயத்தைத் குறைத்து விடலாம்.

இந்த முதல் அடியை இறுதிவெளிப்பாடு வரையறை ஆவணம் (functional specification) என்று குறிப்பிடுகிறோம் (இவெவ).

அறிமுகம்

நிறுவனத்தில் வளங்களை கட்டி மேய்க்க உதவும் மென்பொருள் பயன்பாடு ERP எனப்படும் நிறுவன வள திட்டமிடல் (நிவதி). நிவதி (ERP) மென்பொருளை உருவாக்குதல், அதன் அடிப்படைக் கூறுகள், நடைமுறைப்படுத்துதல் குறித்து எழுதுவதாக திட்டம்.

இந்த மென்பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறைகள், சரியான நடைமுறை பரிந்துரைகள் சில இருந்தாலும் ஒரு இடத்தில் பொருந்துவது எல்லா இடத்திலும் பொருந்தாமல் போய் விடலாம்.

அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஒரே தரவுத் தளத்தில் சேமித்துப் பயன்படுத்துவது என்று வரையறுக்கலாம்.

டேலி போன்ற கணக்கியல் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை நிவதி மென்பொருளாக விரிவுபடுத்துவது, உற்பத்தித் துறை மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட மென்பொருளை கணக்கியலுக்கும் நீட்டிப்பதுடன் ஒப்பிடும்போது பல அடிப்படை வேறுபாடுகள் இருக்கும்.

உலக அளவில் எஸ்ஏபி நிறுவனம் உற்பத்தித் துறைக்கும், பீப்பிள்சாப்டு நிறுவனத்தின் நிவதி மென்பொருள் நிதிநிலை மேலாண்மைக்கும் அதிக பொருத்தமுடையதாக இருக்கின்றன என்று நம்பப்படுகிறது. பீப்பிள்சாப்டு இப்போது ஆரக்கிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு விட்டது.

எங்கள் மென்பொருளுக்கு முதல் வடிவம் கொடுக்கும் போது அடிப்படை நோக்கம்
  • இணையம் வழி தகவல் பரிமாறிக் கொள்ளுதல்
  • பல இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபரங்கள் அணுக வசதி செய்தல்
என்பதாக இருந்தது.

தோலுக்கு ERP ஒட்டுமா என்ன?

ஜெர்மனியைச் சேர்ந்த SAP என்ற நிறுவனம் 1970களிலேயே இந்தத் துறையில் நுழைந்து உலகெங்கும் கால் பதித்திருக்கிறது. அவர்களது மென்பொருளை மாற்றி அமைக்க, செயல்படுத்த, பயிற்சி அளிக்க என்று பெரும் எண்ணிக்கையிலான துணை நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான மென்பொருள் வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம், தரவுத் தள மென்பொருள் உருவாக்கிக் கொடுக்கும் பணியில் ஆரம்பித்து இன்றைக்கு SAPயுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில் நிறுவன மேலாண்மை மென்பொருட்களையும் உருவாக்கி விற்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சந்தையில் தனக்குப் போட்டியாக இருந்து சிறு நிறுவனங்களை வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டு வளர்ந்திருக்கிறது.

இதைத் தவிர ஐபிஎம், மைக்ரோசாப்டு போன்ற நிறுவனங்களும் தமது சேவைகளை வழங்குகின்றன. இவை கோடிக்கணக்கில் செலவாகும் சேவைகள். இந்தியாவில் ராம்கோ சிஸ்டம் முதலான நிறுவனங்களும் இந்தத் துறையில் கால் வைத்திருக்கின்றன.

பெரிய நிறுவனங்களின் பெரிய இலக்குகள், வாகன உற்பத்தி, பெரிய இயந்திரங்கள் செய்யும் தொழில்கள், எஃகுத் தொழில், விமானம் கட்டும் தொழில் என்று ஒரே நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் துறைகளில் இருக்கின்றன.

இந்தக் கணினி மயமாக்கல் தோல் துறையில் இன்னும் நடைபெறவில்லை. தோல் துறையில் ஒரு நடுத்தர அளவு நிறுவனத்தின் சராசரி ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய்களாக இருக்கலாம். தொழில் செய்யும் முறையும் பழைய ஊறிப்போன பழக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சில கோடி ரூபாய்கள் செலவழித்து மென்பொருள் பயன்பாட்டைச் செயல்படுத்த முன்வரும் நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணி விடும் அளவில் கூட இல்லை.

பிற துறைகளில் மென்பொருட்கள் புழங்குவதைப் பார்த்தவர்கள் தாமும் ஏதாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உள்ளூரில் கணினித் துறையில் பட்டம் பெற்ற உறவினர் அல்லது நண்பரின் மகனைக் கேட்டு ஏதாவது செய்ய முயன்றார்கள். கணக்கு முடிப்பதற்கு டேலி போன்ற கணக்கியல் மென்பொருளைப் பயன்படுத்தினாலும், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவன மென்பொருட்கள் மூலம் செலவுகளைக் குறைத்து வருமானத்தைப் பெருக்கும் வழி திறக்காமலேயே இருந்து வந்தது.

அத்தகைய மென்பொருள் குறைந்த செலவில் துறையின் நுணுக்கங்களை தெரிந்து உருவாக்கப்பட்டால், துறையில் இயங்கும் தொழில் முனைவோரின் மனமறிந்து அவர்களுக்கு எது பலனளிக்கும் என்பதைப் புரிந்து கொண்டு சேவை வழங்கக் கூடிய ஒரு சேவை கிடைத்தால் சிறிது சிறிதாக நிலைமை மேம்படலாம்.

தோல் துறை - மென்பொருள் தகவல் மேலாண்மை

தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும் தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning) எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல், பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும் விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல் விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனத்தில் மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர் விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.

பொருள் வாங்கும் பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து, விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை அனுப்பி விடும்.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும் ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும் மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.

இப்படி ஒரு மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும் பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.

நிறுவன வளம் பேணல் - தோல் துறை

தோல் பதனிடும் நிறுவனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றை கடைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இவை அனைத்தையும் தாங்கும் வடிவமைப்பு நிறுவனங்கள், வேதிப் பொருள் வழங்கும் நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றாக தமது செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினியில் முறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைக் கணினிகளில் சேமித்து முடிவுகள் எடுக்கப் பயன்படுத்துவதற்கு ERP (Enterprise Resource Planning) எனப்படும் நிறுவன வளங்களைப் பேணும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றின் அடிப்படை மிக எளிதானது. நிறுவனத்தின் செயல்பாடுகளான வாங்குதல், பயன்படுத்துதல், விற்றல், ஊழியர்கள் விபரங்கள், கணக்கு வழக்குகள் அனைத்தையும் ஒரே தரவுத் தளத்தில் சேர்க்க வேண்டும். தகவல்களை சரியாக வடிவமைக்கப்பட்ட தரவுத் தளத்தில் சேமித்தால் தேவைப்படும் போது தேவைப்படும் விபரங்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்கள் மூலமாக கூடுதல் விபரங்களையும் கணினி மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனத்தில் மூலப் பொருள் உள்ளே வரும் போது கணினியில் வாசலில் இருக்கும் காவலர் விபரங்களை உள்ளிடுகிறார். அது கிடங்குக்கு வந்ததும், அதனுடன் வந்த ஆவணங்களைச் சரி பார்த்து அளவு, தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு கிடங்கு மேலாளர், அந்த விபரத்தை உள்ளிடுகிறார்.

பொருள் வாங்கும் பிரிவினர் இப்படி வந்து சேர்ந்த விபரத்தை தமது கணினியில் பார்த்து, விற்பனையாளரிடமிருந்து வரப் போகும் பில்லை அதனுடன் இணைத்துக் கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கியல் பிரிவு விற்பனையாளருக்கு காசோலை அனுப்பி விடும்.

இப்படியே ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்களும் ஆவணங்களும் பணமும் நகரும் விபரங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளும் மென்பொருள் பயன்பாடு, தேவைப்பும் விபரங்களைத் தேவைப்படும் நேரத்தில் சரியான அனுமதிகள் இருப்பவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியும்.

இப்படி ஒரு மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து, சின்னச் சின்ன விபரங்களை மாற்றியமைத்து, விபரங்களைக் கணினியில் உள்ளிட்டு, தனக்கு வேண்டிய தகவல்களை கணினியின் மூலம் பெறும்படி நிறுவன ஊழியர்கள் வேலை செய்யும் பழக்கங்களை மாற்றி, தேவையான கணக்கீடுகளைப் போட்டு நிறுவனத்தை நடத்த எடுக்கும் முடிவுகளுக்கு உதவி செய்யும் படி ஆவணங்களை உருவாக்கித் தருவது இன்றைக்கு ஒரு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துறை.

தோல் துறை தகவல் பரிமாற்றம்

2000ம் ஆண்டில் நான் இங்கிலாந்தின் பிஎல்சி தோல் தொழில்நுட்ப மையத்தின் ஷாங்காய் கிளையில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அப்போது தாய்வானில் இருந்த ஒரு தோல் நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அந்த நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி தோல் பதனிடும் நிறுவனம் மற்றும் தாய்வானின் காலணி உருவாக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவானது.

அவர்களது தலைமை அலுவலகம் தாய்வானின் வடக்கு நகரமான தாய்பெயில் இருந்தது. தோல் பதனிடும் தொழிற்சாலையின் மைய தொழிற்சாலை தாய்வானின் மத்திய நகரமான தாய்சுங்கில் இருந்தது. நிறுவனத்தில் தலைமை மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது புதிய பெரிய தோல் தொழிற்சாலை சீனாவில் இருந்தது. சீன தோல் தொழிற்சாலையில் இங்கிலாந்து, தாய்வான் மற்றும் உள்ளூர் மேலாளர்களும், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தார்கள்.

ஹாங்காங் நகரத்தில் அவர்களுக்கு ஒரு வணிக அலுவலகம் செயல்பட்டது. அதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை கையாண்டு வந்தார்கள்.

நிறுவனம் பதப்படுத்தப் போகும் தோல்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அமெரிக்க கூட்டாளியின் முதன்மை நோக்கம் அவர்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் இடைநிலை தோல்கள் விற்பது. தோல்களை பதப்படுத்தி வரும் இறுதித் தோல் சீனா மற்றும் தாய்வானில் இருக்கும் காலணித் தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டது. செய்யப்பட்ட காலணி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி விமானப் போக்குவரத்து கிடையாது. தாய்வானிலிருந்து சீனா வருபவர்கள் ஹாங்காங் போய்த்தான் வர வேண்டும்.

தலைமை அலுவலகம், இரண்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகள், காலணி வாங்கும் நிறுவனங்கள், ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், காலணித் தொழிற்சாலை இவர்களுக்கிடையே தினமும் தொலைபேசி மூலம், துரித அஞ்சல் சேவை மூலம், மின்னஞ்சல் மூலம், நேரடி சந்திப்புகள் மூலம் தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தகவலும் அடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் அவர் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். கால தாமதங்கள் பெரிய இழப்புகளை கொடுத்து விடும்.

2000ம் ஆண்டில் அதை பார்த்த எனக்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவையும் எப்படி சமாளித்து செல்கிறார்கள்! தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பு, தகவல் பரிமாற்றம் மூன்றையும் ஒருமுகப்படுத்த முடியுமா என்று சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் டாட்காம் பூம் உச்சத்தில் இருந்த நேரம். எனது மற்ற தொடர்புகள் மூலம் இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் உணர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தோல் துறையில் இருக்கும் எல்லா நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் மென்பொருள் பயன்பாடு ஒன்று உருவாக்கி சேவை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

சிறிய, நடுத்தர, அல்லது பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் மேலே சொன்ன பல நாட்டு வாடிக்கையாளர்கள், பல நாட்டு இடுபொருட்கள் வாங்கித்தான் தோல் துறையில் தொழில் நடத்துகிறோம். தரவு சேகரித்தலும், அதை தகவலாக மாற்றுவதும், மாற்றியதை பகிர்ந்து கொள்வதும் தொழிலின் அடிப்படைத் தேவைகள்.

எந்த ஒரு வேலையை செய்தாலும் அதன் விபரங்களை பதிவு செய்து வைத்து கொள்கிறோம். நிறுவனத்துக்கு வேதிப் பொருட்கள் வந்தால் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்கிறோம். தோல் வாடிக்கையாளருக்குப் போகும் போது அதற்காக ஒரு சீட்டு தயாரித்து அனுப்புவதோடு குறிப்பேட்டிலும் குறித்துக் கொள்கிறோம்.

தேவையான பொழுது குறிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறோம். விற்பனை அறிக்கை, சரக்கு கையிருப்பு, பணம் கொடுக்க வேண்டிய விபரங்கள், வாங்கிய அறிக்கை என்று கைவசம் இருக்கும் தகவல்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம்.

பல நேரங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அல்லது விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 'இன்ன தேதியில் இன்ன பொருள் அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கான விற்பனை ஆவணம் இதோ' என்று அனுப்பினால்தான் வாடிக்கையாளரிடம் பணம் பெற முடியும். மாதிரி பொருட்கள் குறித்த வாடிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறோம்.

தகவல் கையாளுவதைப் பொறுத்த வரை
  • தகவலை சரிவர சேகரித்தல்
  • சேகரித்த தகவலை பாதுகாப்பாக பதிவு செய்தல்
  • பதிவு செய்த தகவலிருந்து அறிக்கைகள் தயாரித்தல்,
  • தகவல்களை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

    இந்த நான்குமே அடிப்படையான காரணிகள்.
இந்த நான்கையும் திட்டமிட்டு வடிவமைத்து ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாடுகளை புகுத்தி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, எளிதாக அறிக்கைகள் தயாரிப்பது, சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது, தேவையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நிலைகளை புகுத்துவது என்று பல படிகளில் செயல்படுவது நிறுவன மேலாண்மை மென்பொருட்கள். பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் எஸ்ஏபி முதல் சில லட்சத்துக்குக் குறையாத சேவைகள் வரை பல நிலைகளில் அவை கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, நிறுவனத்தில் செயல்படுத்தினால் மேலே சொன்ன பல பயன்கள் கிடைத்து நிறுவனம் முதலீட்டில் பல மடங்கு ஆதாயம் ஈட்டிக் கொள்ளலாம்.

பொதுவாக அவ்வளவு பெரிய முதலீடு செய்வதற்கு பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமிருக்கிறது. நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த அளவு பணம் போட்டு நிறுவனம் முழுவதும் மாற்றங்களை புகுத்தி நிறுவன மேலாண்மை மென்பொருள் ஒன்றை அமல்படுத்துவதற்கு நிறைய தயக்கம் இருக்கிறது.

ஆரம்பத்தில் நாங்கள் விற்ற மென்பொருளின் விலை மற்றும் சேவை முறை சில ஆயிரங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். எங்களது அடிப்படை நோக்கம் அறிக்கை உருவாக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம். தகவலை பதிவு செய்தல், கட்டுப்பாடு நடவடிக்கைகள் இவற்றில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

50 பேருக்கு உட்பட்ட அளவில் பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் தகவலை பதிவு செய்வதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நிறுவன உரிமையாளரின் நேரடிக் கண்காணிப்பில் நடந்து விடும். பதிவு செய்த தகவல்களிலிருந்து அறிக்கை எடுப்பதும் தகவல் பரிமாற்றம் செய்வதும் சிக்கலான வேலையாக இருக்கும்.

படிப்படியாக பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பதிவு செய்தல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் என்ற நிறுவன மேலாண்மை மென்பொருட்களை தயாரித்தாலும், அவற்றுடன் கூடவே தேவைப்படும் பல அறிக்கைகள் உருவாக்குதல், தகவல் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கூறுகளை உறுதியாக தயாரித்துக் கொண்டிருந்தோம்.

விற்பனை தகவல்கள் இருந்தால் அதிலிருந்து ஆயிரக்கணக்கான வெவ்வேறு அறிக்கைகளை தயாரிக்க முடியும். தகவல்களை யாருக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அப்படி வடிவமைத்து, யாருடன் எந்த அளவில் எந்த வழியில் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.

நிறுவன மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்தும் நிறுவனம் தமது இன்வாய்சுகளை அஞ்சலிலோ மின்னஞ்சலிலோ அனுப்பத் தேவையில்லை. விபரங்களை மென்பொருளில் உள்ளிட்டு விட்டால், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு விடும். அதிலிருந்து அவர் அச்செடுத்துக் கொள்ளலாம். விற்பனை விபரங்களிலிருந்து அந்த மாதத்துக்கான விற்பனை அறிக்கை கூடுதல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விடும். வாடிக்கையாளரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது என்ற அறிக்கையும் உடனடியாக கிடைக்கும். பொருளுடன் அனுப்புவதற்காக ஆவணங்கள் அச்சு வடிவில் கிடைத்து விடும். சரக்கு கையிருப்பில் பொருட்களின் அளவு குறைந்து விடும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இப்போது டேலி போன்ற கணக்கியல் மென்பொருட்கள் அல்லது எக்செல் போன்ற விரிதாள் மென்பொருட்களில் தகவலை பதிந்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி பதியப்பட்ட தகவல்களிலிருந்து நூற்றுக்கணக்கான அறிக்கைகள் தயாரிக்கவும், தேவைப்படும் நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விபரங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான மென்பொருள் ஒன்றை நிறுவன மேலாண்மை மென்பொருளிலிருந்து பிரித்து எடுத்து தனியாக வழங்குகிறோம். அதுதான் குளோவியூ.

தகவலை மின்னஞ்சல் அல்லது அச்சுப் பிரதி அல்லது கையால் எழுதி அனுப்பினால் அனுப்புபவர் அதை தயாரிப்பதற்கு ஒரு முறை பெறுபவர் விபரங்களை தனது பக்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கு கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். பதிவு செய்யப்பட்ட தகவல்களிலிருந்து அறிக்கைகள் தயாரிப்பதற்கு மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் தகவலை மின்னணு வடிவில் பொதிந்து அனுப்பிக் கொள்ளலாம்.

கலிஃபோர்னிய தங்க வேட்டையும் தகவல் தொழில் நுட்பத் துறையும்

19ம் நூற்றாண்டின் மத்தியில் கலிஃபோர்னியாவில் தங்கம் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளிலிருந்து, மத்திய, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து, சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலிஃபோர்னியா நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

கலிஃபோர்னியா அப்போதுதான் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் நிர்வாகத்துக்கு மாறியிருந்த நேரம். அதனால் சட்ட திட்டங்கள், நில உரிமை சட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படாமலேயே இருந்தன. முதலில் வந்தவர்களுக்கு உரிமை என்று இருந்தது.

சொத்து பத்துகளை விற்று, பணமாக்கி எப்படியாவது கலிஃபோர்னியா போய் விட வேண்டும் என்று துணிச்சலாக பலர் நகர்ந்தார்கள். கலிஃபோர்னியாவின் மக்கள் தொகை சில ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்தது.
  • நிலத்தை வளைத்துப் போட்டு தரையைத் தோண்ட வேண்டும். தங்கம் கண்டு பிடித்து விட்டால் பெரிய பணக்காரன் ஆகி விடலாம்.
  • தரையைத் தோண்டும் கருவிகள், போக்குவரத்து வாகனங்கள் இவற்றின் தேவையும் விலையும் பல மடங்காக உயர்ந்தன.
இந்த சூழலில் பிழைப்பை நடத்தவும் இன்னும் பல்லாயிரக் கணக்கிலானோர் கலிஃபோர்னியாவில் குடியேறினார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என்று தங்க வேட்டைக்கு வந்திருப்பவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் சேவைகளும் சூடு பிடித்திருந்தன.

வீட்டிலிருந்து புறப்படும் யாருக்கும் 'கலிஃபோர்னியா போய்ச் சேர்ந்து விட்டால் தெருவுக்குத் தெரு தங்கம் குவிக்கப்பட்டிருக்கும். நாம் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்' என்ற கனவு இருந்திருக்கும்.

நடைமுறையில் தங்கம் எடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடப் போவதில்லை. அதுவும் எளிதாக திரட்டி விடக் கூடிய தங்கப் படிமங்களை ஆரம்ப வேட்டைக்காரர்கள் கைப்பற்றி விட்ட பிறகு, மற்ற தங்க கனிமங்கள் நிறைய இருந்தாலும், அவற்றை இடம் கண்டு சுரங்கம் தோண்டி எடுப்பது மிகச் சிலருக்கே வாய்க்கக் கூடியது.

ஆரம்பப் பரபரப்பில் சில ஆண்டுகள் மேலே சொன்ன நடைமுறையைத் தாண்டிய உற்சாகமும், நம்பிக்கையும் ஒருவருக்கொருவரை உந்திச் செலுத்தி உண்மை நிலவரத்துக்கு தொடர்பில்லாமல் விலைவாசிகள் பல மடங்குகள் உயர்ந்தன.

'எல்லோரும் போகிறார்கள் நாமும் போகிறோம். எல்லோரும் பொருளுக்கு அதிக விலை கொடுக்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம். தங்கம் கிடைத்த பிறகு கிடைக்கும் சம்பாத்தியத்தில் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம்.'

கூட்டமாக செலுத்தப்படும் இந்த மனோஓட்டம் ஓரிரு மாதங்களில் ஆரம்பித்து பல ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம். இப்படிப்பட்ட தங்க வேட்டைகளில் தங்கம் எடுப்பதின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் 10 பேர் இருந்தால், தங்கம் எடுக்க வந்தவர்களுக்கு பொருள் விற்று பணம் ஈட்டியவர்கள் 1000 பேர் இருப்பார்கள்.

நிற்க.

1980களில் ஆரம்பித்து 30 ஆண்டுகளாக இன்னொரு தங்க வேட்டை. தகவல் தொழில் நுட்பம் என்ற தங்கச் சுரங்கத்தில் எல்லோரும் சுலபமாக பணக்காரர்கள் ஆகி விடலாம் என்று ஒரு ஓட்டம் ஆரம்பித்தது.

1. டாட்காம் வளர்ச்சியின் போது 1997 முதல் 2001 வரை, கணினியை இயக்கத் தெரிந்து சில மாதங்களுக்கான பயிற்சியில் ஒரு சான்றிதழ் வாங்கி விட்டால் வேலை கிடைக்கும். சம்பளம் பல ஆண்டுகள் படித்து, இன்னும் பல ஆண்டுகள் பணி அனுபவம் ஈட்டி வேலை செய்பவர்களை விட அதிகம்.

2. அந்த ஓட்டம் ஓய்ந்து 2001ம் ஆண்டின் பொருளாதாரச் சுணக்கத்துக்குப் பிறகு தங்க வேட்டையின் அடுத்த கட்டம். பொறியியல் பட்டப் படிப்பு படித்திருந்தால் வேலை. சம்பளங்களும் மற்ற துறைகளை விட குறைந்தது 2 மடங்கு அதிகம்.

எங்கிருந்து பணம் வந்தது? தங்க வேட்டையில் நடக்கும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி விலைகளை ஏற்றுக் கொள்ளும் முறைதான் இங்கும். பணம் உருவாக்குவதற்கு பன்னாட்டு வங்கி அமைப்புகளும், சந்தைகளும் உதவி புரிந்தன.

3. கடந்த 2 ஆண்டுகளின் பொருளாதாரக் சுணக்கத்தில் இந்தக் குமிழியும் உடைந்து போனது.

எளிதாகக் கைப்பற்றக் கூடிய வளங்களை, ஒருவருக்கொருவர் பேசிப் பேசியே ஏற்றி வைத்த மதிப்புகளை வைத்து பணம் பார்த்த காலம் முடிந்து போனது.

இனிமேலும் பல ஆண்டுகள் தகவல் தொழில் நுட்பத்தின் தங்க வளங்களை தோண்டி எடுக்க முடியும். ஆனால், அதற்கு மற்ற துறைகளைப் போலவே கணக்கு பார்த்து, செலவு குறைத்து, நுணுக்கமாக பாடுபட்டு உழைக்க வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகள் உலகப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைப் பார்க்கும் பத்தாண்டாக இருக்கப் போகிறது.

மென்பொருள் துறை - எங்கே போக முடியும்?

மென்பொருள் துறையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'இந்தியாவுக்கு மென்பொருள் உருவாக்கத்தை இடம் மாற்றும் நிறுவனங்கள் ஊதிய நிலைகளை மட்டும் பார்ப்பதில்லை. குறைந்த செலவில் வேலை நடந்தாலும், அமெரிக்காவில் என்ன தரம் எதிர்பார்க்கிறார்களோ அந்தத் தரத்தை இந்திய மென்பொருள் உருவாக்க மையத்திலும் பெற்று விட வலியுறுத்துகிறார்கள்'

புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே மாணவர்களைக் கவர மென்பொருள் நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றன. சிறு நகரங்களின் கல்லூரிகளிலும் வளாகத்திலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் வழக்கத்துக்கு வந்து விட்டன.

மென்பொருள் துறையில் நுழையும் மாணவர்களுக்கு இருக்கும் ஒரு குழப்பம், 'கல்லூரியில் என்ன துறை எடுத்துப் படிப்பது?'. பிஈ-கணினிவியல் படிப்பவர்கள் சிறு வயதிலேயே கணினியின் உள் இயங்கல்களில் ஆர்வம், கணினிகளை எப்படி மேம்படுத்துவது என்ற ஆர்வம் உடையவர்களாக இருப்பது நல்லது. நான்கு ஆண்டுகள் கணினிவியல் படித்து விட்டு எஸ்ஏபி செயல்படுத்தும் வல்லுநராக வேலை பார்ப்பது அல்லது மென்பொருள் உருவாக்கத்தில் மேலாண்மை வேலை செய்வது காசுக்கு நல்ல வழி கொடுத்தாலும் சில ஆண்டுகளில் சலித்து விடும்.

கணினிகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்கும் துறைகளில் பணி புரிய விரும்புவர்கள், கணினிவியல் தவிர்த்த பிற பிரிவுகளைப் படித்துக் கொண்டே கல்லூரியின் ஓரிரு பாடங்களிலும், வெளியில் கற்றுக் கொள்வதின் மூலமும் கணினி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமே துறை அறிவும், கணினி பற்றிய புரிதலும் இருப்பவர்களுக்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகும்.

வெறும் நிரல் எழுதும் திறனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குறிப்பிட்ட தேவையை அலசி நிறைவேற்றப் பயன்படும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் ஊரில் ஜாவா, டாட்நெட், சி/சி++ என்ற கருவிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் முன்னர், எப்படித் தேவையை அலசித் திட்டமிட வேண்டும் என்பதற்குக் கொடுப்பதில்லை.

மென்பொருள் உருவாக்கத்தில் மேற்சொன்ன கருவிகளைப் பயன்படுத்தி நிரல் எழுதுவது என்பது கட்டிடம் கட்டுவதில் செங்கல் வைத்து சுவர் எழுப்புவது போன்றது என்றால், அதற்கு முந்தைய துறை சார்ந்த வேலைகள் கட்டித்துக்கான திட்டப் படம் வரைதல், எவ்வளவு ஆழம் அடித்தளம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தல் முதலான கட்டமைப்பு திறன் தேவைப்படுபவை. நிரல் எழுதுவதை விட இதற்கு மதிப்பு அதிகம் என்பதில் ஐயமே இல்லை.

நம்முடைய முயற்சிகள் யாரோ வரையறுத்த தேவைகளுக்கு நிரல் எழுதிக் கொடுத்து பணம் ஈட்டுவது என்பதிலிருந்து, நாமே தேவைகளை அலசி, திட்டம் தீட்டி அதன் அடிப்படையில் மென்பொருள் உருவாக்குவது என்ற நிலைக்கு மாற வேண்டும். இன்றைக்கு மென்பொருள் உருவாக்கத்தில் அத்தகைய திறமைகளை கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வேலை செய்ய ஆரம்பித்த பிறகுதான் கற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது.

தொழில் முனைவோருக்கு 2007ல் மென்பொருள் துறையில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? மென்பொருள் தேவைகளுக்குக் குறைவே இல்லை. சென்னையில் மாநகரப் பேருந்தில் ஏறினால் இன்னும் நடத்துனர் பெரிய அட்டையில் விதவிதமான பயணச் சீட்டுகளை வைத்துக் கொண்டு எச்சில் தடவி, நிலை குறித்துக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கைக்கடக்கமான சீட்டு வழங்கும் கருவியில் தேவையான சீட்டை உடனுக்குடன் அச்சடித்துக் கொடுக்கும் முறை பெங்களூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகளுக்கு அப்படி ஒரு கருவி செய்து வழங்குவது ஒரு தேவை.

இப்படி கண்களைத் திறந்து பார்த்தால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு வாய்ப்பு தலையைக் காட்டுகிறது. இந்த வாய்ப்பை, தேவையை பூர்த்தி செய்ய பொருள், சேவையை உருவாக்கி, சரியான விலைக்கு விற்று ஆதாயம் காணும் முறை நம் இந்திய சூழலுக்கு பொருத்தமாக ஏற்பட்டு விடவில்லை. வெளிநாட்டிலிருந்து, அனுப்பப்படும் தேவைகளைச் சார்ந்து நிரல் எழுதும் முறையைப் போலவே நம் உள்ளூர் தேவைகளுக்கும் அரசு, அல்லது தனியார் நிறுவனங்கள் கேட்டு அவர்களது தேவைக்கேற்றவாறு மென்பொருள் உருவாக்கிக் கொடுக்கும் தொழில் முனைவுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

வெயில் காலம் வந்தால் கரும்புச் சாறு விற்கும் கடைகள் பெருகும், தீபாவளிக்கு அதிகமாகப் பட்டாசு விற்கும் என்று உற்பத்தி பெருகுதல், கோயம்பேட்டில் பேருந்து நிலையம் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அந்தப் பகுதியில் முளைத்த தங்கும் சாப்பிடும் விடுதிகள், என்று சந்தையின் தேவையறிந்து, தேவைக்கேற்ற சேவையை உருவாக்கி வழங்கும் தொழில் முனைவு மென்பொருள் துறைக்கு வரவில்லை. மிகச் சமீபத்திய துறையாக இருப்பதால் தேவையான உள்ளீடுகளை தயாரித்து சரியான செலவில் பொருள்/சேவையை உருவாக்கி சந்தையில் விற்கும் முறை ஒன்றை உருவாக்கி தொழில் முனைவை ஊக்குவிக்க அரசு அல்லது தனியார் அறக்கட்டளைகள் முன்வரலாம்.

மென்பொருள் தர நிர்ணயம்

உற்பத்தித் துறையில் புள்ளியியல் சார்ந்து தரக்கட்டுப்பாடு என்று ஒரு முறை இருந்தது.

உற்பத்தித் துறையுடன் கூடவே தரக்கட்டுப்பாட்டுத் துறை என்று ஒன்று இருக்கும். உற்பத்தித் துறையின் வேலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தயாரித்துக் கொடுத்து விடுவது. தரக்கட்டுப்பாட்டுத் துறை உற்பத்திப் பொருட்களில் எவ்வளவு சொத்தை, சொள்ளை என்று பார்த்து நல்லதை மட்டும் வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியது.

தரக்கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கும் உற்பத்தித்துறைக்கும் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். வீணாக்கல் அதிகமாக இருக்கும். ‘என்னவானாலும், கடைசியில் குறிப்பிட்ட பகுதியை கழித்து விடுவார்கள், வேலையை நடத்திக் கொண்டே இருங்கள், அளவுதான் முக்கியம், தரம் கடைசியில் நிர்ணயிக்கப்படும்.’ என்று உற்பத்தித் துறையின் போக்கு.

இதில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய TQM என்ற முழுமையான தர நிர்ணய முறையைக் கொண்டு வந்தார்கள். தரக் கட்டுப்பாட்டு பிரிவு என்று ஒன்று தனியாக இருக்காது. ஒவ்வொருவரும் தாம் செய்யும் வேலை சரியான தரத்தில் வெளியீட்டைக் கொடுக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயந்திரத்தை இயக்கும் தொழிலாளர், ஒவ்வொரு துண்டை வெட்டும் போதும் அதன் தடிமன் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சரியில்லை என்றால் இயந்திரத்தின் அமைப்புகளை மாற்றி உடனேயே தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். கடைசி வரை தரக்கட்டுப்பாட்டுத் துறைக்குப் போய் விட்டு அதன் பிறகு மறு சீரமைப்பாக இரட்டிப்பு வேலை தேவை இருக்காது.

ஒவ்வொருவரும் தமது பணிக்கு தரக் கட்டுப்பாட்டு மேலாளராக ஆகி விடுவார்கள். எத்தனை உற்பத்தி செய்தாய் என்பதை விட எவ்வளவு தரமானவற்றை உற்பத்தி செய்தாய் என்பது அளவீடாக மாறி விடும்.

இப்போது மென்பொருள் துறையில் testing அல்லது மென்பொருள் சோதனை செய்து பார்ப்பது என்பது ஒரு தனி பிரிவாக இருந்து வருகிறது.
ஒரு புதிய தேவையை நிறைவேற்ற, அதை அலசி ஆராய்ந்து, வடிவமைத்து, திட்டமிட்டு, நிரல் எழுதி முடித்த பிறகு சோதனைக்கு வர வேண்டும். ஆராயும் போது அல்லது வடிவமைக்கும் போது எப்படி சோதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று வழிகளையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். அந்த வழிகளைப் பின்பற்றி சோதனை செய்து எந்தக் குறையும் தென்படாமல் இயங்கினால் வாடிக்கையாளருக்கு அனுப்பும் படி கொடுத்து விடுவார்கள்.

சிக்கல் என்னவென்றால், யாருக்குமே சோதனை செய்யும் வழிகள் வரையறுத்தலில் ஆர்வமும் விருப்பமும் இல்லை. நிரலில் மாற்றம் செய்து கொடுத்ததை சோதித்துப் பார்ப்பதில் சிலருக்கு மட்டுமே திறமை இருந்தது. அவர்களுக்கும் இது ஒரு கூடுதல் பணியாகவே தென்பட்டது.

‘எனது முதன்மை பணி வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவது. இப்போது அதற்காக நிரல் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். இன்னொரு குழு உறுப்பினர் எழுதி முடித்து விட்ட நிரலை எனக்கு சோதனை செய்யும்படி அனுப்பியிருக்கிறார்கள். நான் நிரல் எழுதுவதுதான் முதன்மை, அதை முடித்து நேரமும் மனநிலையும் ஒத்துழைக்கும் போது சோதனைப் பணியை ஆரம்பிக்கிறேன்’

ஒருவர் முடித்த நிரலை இன்னொருவருக்கு சோதனை செய்ய அனுப்புவது என்று வழி வகுத்துக் கொண்டிருந்தோம். சில கட்டங்களில் 2 பேர் முழுமையாக சோதனை செய்வதற்காக நியமித்திருந்தோம். அதில் பல குறைபாடுகள். அவர்களுக்கு எப்படி சோதனை செய்வது என்று தெரியவில்லை (சோதனை செய்யும் முறைகளை யாரும் எழுதிக் கொடுத்திருக்கவில்லை), அப்படியே தெரிந்தாலும் நாள் முழுதும் சோதனை வேலையே பார்ப்பது சலிப்பாக இருக்காதா என்று முறையீடுகள்.

அதனால், எல்லோருமே குறிப்பிட்ட நேரம் சோதனைக்காக செலவிட வேண்டும் என்று முயற்சிப்பு. அதில்தான் மேலே சொன்ன சிக்கல்.

உற்பத்தித் துறையில் முழுமையான தர மேம்பாடு என்று ஆரம்பித்தது போல நாமும் செய்தால் என்ன?

ஒவ்வொரு நிலையிலும் அதைச் செய்பவர் தரமேம்பாட்டுக்கான வேலையையும் முடித்து விட வேண்டும். தேவையை அலசல் செய்பவர் அந்த அலசலை சார்ந்து என்னென்ன முறையில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்புகளை எழுதி விட வேண்டும்.

அடுத்து மாற்றத்தை வடிவமைப்பு செய்பவர், அந்த வடிவமைப்புக்கு எந்தெந்த கோணத்தில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதை எழுதி விட வேண்டும்.

நிரல் எழுதியவர் தான் எழுதியது மேற்படி குறிப்பிட்ட எல்லாவற்றையும் பூர்த்தி செய்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வாடிக்கையாளருக்கு அனுப்பும் பொறுப்பை எடுப்பவர், இன்னொரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

சோதனை செய்வது என்பது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஆனால், அது ஒரு தனி பணி என்று இல்லாமல் போய் விடும். தத்தமது பணியுடன் தொடர்புடைய தரக்கட்டுப்பாட்டை அவரவரே செய்து கொள்வார்கள். அப்படிச் செய்கிறார்களா என்று ஒருங்கிணைப்பதை மட்டும் தரநிர்ணய மேலாளர் பார்த்துக் கொள்ளலாம்.

C, C++ போன்ற கம்பைல் செய்து இருமமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் மென்பொருட்களை சோதனை செய்வது போலில்லாமல், இணைய பயன்பாட்டுக்கான சோதனை செய்வதில் பல மாற்றங்கள் வேண்டும். தன்னிச்சையாக ஓடக் கூடிய சோதனை முறைகளை உருவாக்குவதற்கு முன்பு சோதனை பழக்கங்கள் வர வேண்டுமே. அதற்கு இந்தப் பழக்கங்களை முயற்சிக்கலாம் என்று யோசனை.

தொழில் வளத்துக்குக் கணினி பயன்பாடு

ஏற்றுமதி வணிகம் செய்யும் எல்லா நிறுவனங்களிலும் குறைந்த அளவு மின்னஞ்சல் மூலம் தகவல் தொடர்பு கொள்வது நடக்கிறது. கடைகளில் விற்பனை மேசை கணினி, சிறு நிறுவனங்களில் கூட வரவு செலவு கணக்கு போட்டு அறிக்கை தயாரிக்க மென்பொருள் என்று நம் ஊர் தொழில்களிலும் கணினி பயன்பாடு ஓரளவு நுழைந்துள்ளது.

இந்த பயன்பாடுகள், ஆழக்கடலில் கரையோரம் நின்று காலை நனைப்பது போலத்தான். உள்ளே குதித்து முத்தெடுப்பது, அதிவேக படகு கட்டி மீன் பிடிப்பது, வலுவான கப்பல் கட்டி வணிகம் செய்வது என்று நடக்க வேண்டிய சாத்தியங்கள் ஏராளம் இருக்கின்றன.

ஒரு சில தகவல்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்:
  1. இன்போசிஸ் நிறுவனம் போன காலாண்டில் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் லாபம் ஈட்டியதாம். இந்த லாபம் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சேவைகள் வழங்குவதன் மூலம் கிடைத்தது.
    அப்படி சேவை வழங்கிய நிறுவனம் இவ்வளவு பணம் ஈட்டுகிறது என்றால், அந்தச் சேவையை வாங்கும் நிறுவனங்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கும்!!

  2. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் முன்பதிவு செய்யப் போனால் குறிப்பிட்ட நிலையத்துக்குப் போய் முன்பதிவு சாளரத்துக்கு முன்பு வரிசையில் நிற்போம். குறித்த ரயில் அந்த நிலையம் வழியாகப் போகும் போது ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்றை பதிவு செய்தால், அந்த விபரத்தை ஒரு பேரேட்டில் குறித்துக் கொண்டு சீட்டையும் தந்து விடுவார் அலுவலர்.

    இதை கணினி மூலமாகச் செய்ய ஆரம்பித்தால் பேரேடு தேவைப்படாது என்பது தெளிவு. ஆனால் அதன் கூடுதல் விளைவுகள் எங்கெங்கு போய் விட்டன என்று பாருங்கள். எந்த ஊரிலிருந்தும் இந்தியாவின் வேறு இரு ஊர்களுக்கிடையே முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். சின்ன சின்ன நிலையங்களிலும் பதிவு செய்யும் வசதி வந்து விட்டது.

    ரயில் போக்குவரத்து, தேவை அதிகரிப்பை ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். இது போல இன்னும் நூற்றுக் கணக்கான சாத்தியங்கள் காத்திருக்கின்றன.

  3. இதே போல வங்கிக் கணக்குகள் கணினி மயமான பிறகு கிடைத்திருக்கும் வசதிகளைப் நாம் எல்லோரும் பார்க்கிறோம்.
இவற்றை எல்லாம் நடைமுறையில் பார்க்கும் நாம், நம்முடைய தொழிலில் தகவல் தொழில் நுட்பத்தை செயல்படுத்தினால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 10% முன்னேற்றம்? 50% முன்னேற்றம்?

'கணக்கு எழுத 3000 ரூபாய்கள் கொடுத்தா ஒரு ஆள் கிடைக்கும் அதுக்குப் போய் எதுக்கு கணினியும் கத்திரிக்காயும்' என்று ஒதுக்காமல், கணினி என்ற ஊழியனை, கருவியை நமது பணிகளில் ஈடுபடுத்தினால் கிடைக்கும் முன்னேற்றம் உன்னதமாக இருக்கும். எதையுமே அளக்க ஆரம்பித்தாலே முன்னேற்றம் ஆரம்பித்து விடும். அப்படி அளந்ததை பல முறைகளில் ஆராய்ந்து அலசி முடிவுகளை உணர்ந்து கொள்ள தொழிலில் தகவல் தொழில் நுட்பத் துறை உதவும்.

ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் ஆர்டர்களுக்கு பொருள் செய்து விற்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆர்டர் பட்டியலை எடுத்து பயன்படுத்துவார்கள். வாடிக்கையாளர் பெயர், பொருளின் பெயர், அளவு, விலை, மதிப்பு, வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய தேதி என்று விபரங்கள்.

பல ஆர்டர்கள் குறித்த தேதியில் போகாமல் ஓரிரு வாரங்கள் தாமதமாகி விடும். அது ஒரு பெரிய தலைவலி. ஒரே வாடிக்கையாளரிடமிருந்து பல ஆர்டர்கள் வரும் போது சில ஆர்டர்கள் அப்படியே புதைந்து போவதும் உண்டு.

கணினியில் ஆர்டர் நிலவரத்தை போட்டு வைக்க ஆரம்பித்த பிறகு, நிறுவன உரிமையாளர் ஒரு நாள், 'ஏம்பா, டெலிவரி தேதியை வார எண்ணாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் என்ன போக வேண்டும் என்று ஒரு அறிக்கை கொண்டு வா' என்று கேட்டார். கணினியில் இது சில நிமிட வேலை.

அப்படி ஒரு அறிக்கையை மே மாதத்தில் எடுத்துப் பார்த்தால் முந்தைய ஆண்டு டிசம்பரில் (51வது வாரம்) போக வேண்டிய ஆர்டர் கூட இன்னும் முடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான பொருளும் உற்பத்திக்கு அனுப்பப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற அவசர ஆர்டர்களின் பின்னால் ஓடி இந்த ஆர்டரை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அறிக்கையை பார்த்தாலும் இப்படி மாற்றிப் பார்க்கும் போதுதான் நமது செயல்பாட்டின் குறைபாடு தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஒவ்வொரு தொழிலிலும் இது போல நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் புதைந்து கிடக்கின்றன.

நீராவி எந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு துறையிலும் அதைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு போனது போல, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகு நமது தொழில் நிறுவனங்களும் அந்தக் கருவியை செயல்படுத்தி அடுத்த உயர் நிலைக்கு போக வேண்டும்.

மென்பொருள் துறையின் போக்கு

1980களின் இறுதியில்
  • பில் கேட்ஸ் விண்டோஸ் இயங்குதளம் மூலம் உலகை கைப்பற்றத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில
  • எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய படைப்புகளை கணினியில் எழுத ஆரம்பித்து விட்ட நேரத்தில்
  • அமெரிக்க மாணவர்கள் BBS மூலம் உலகின் பல்வேறு மூலைகளில் இருப்பவர்களுடன் உரையாட முடிகின்ற பொழுதில்
  • ரிச்சர்டு ஸ்டால்மான் GNU இயக்கத்தை ஆரம்பித்து விட்ட பிறகும்
இந்தியாவின் தென்கோடி நகரில் மேல் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான் நம்பிக்கையில்லாதவனாகவே இருந்தேன்.

'என்ன பெரிய கம்ப்யூட்டர், எல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்குத்தான், அப்புறம் இந்த அலை ஓய்ந்து கம்ப்யூட்டர் உலகுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறார்கள்' என்ற புரிதல்தான் இருந்தது.

இருபது ஆண்டுகள் கூட தாண்டியிராத இன்றைக்கு மென்பொருள் துறையின் சாத்தியங்களை நினைத்துப் பார்க்கும் போது, எல்லை தெரியாத பெருங்கடல் பரப்பு போல் விரிந்து நிற்பதாகப்படுகிறது.

அறிவியல் புனைகதைகளில் வருவது போல உலகளாவிய கணினி இணையம் இப்போதே நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இணைய கட்டமைப்பு உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் கிடைக்கும்படி ஆகி விடும்.

குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காத கிராமங்களில் கூட கோக்கோ கோலா பாட்டிலில் கிடைப்பது போல, பிற அடிப்படை வசதிகளை முந்திக் கொண்டு கம்பி வழி, கம்பியில்லாத இணைய இணைப்புகள் சிறு கிராமங்களுக்குக் கூட பரவி விடும். அமெரிக்கத் தொழில் முறையின் கீழ் இயங்குபவர்களுக்குச் சேவை வழங்குவதற்காக போடப்படும் இந்த இணைப்புகள் புல்லுக்கும் பொசியும் நீராக அந்த வட்டத்துக்கு வெளியில் இருக்கும் மக்களுக்கும் பயன்பட ஆரம்பித்து விடும்.

  1. இன்றைக்கு மென்பொருள் துறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே வளர்ந்து வருகிறது. தனிமனித வாழ்வின், தொழில்களின் மனித இடையூறு தேவைப்படாத செயல்களுக்கெல்லாம் கணினிகளை ஈடுபடுத்துவது நடந்து வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் ஒருவர் அவரது பணியைப் பற்றிச் சொன்னார். "பெரிய நிறுவனங்களுக்கு எழுதுபொருள் வழங்கும் நிறுவனத்தில் நான் பணி புரிகிறேன். எங்கள் வாடிக்கையாளரின் அலுவலகத்தின் இன்ன பொருள் தேவை என்று அவர்களது கணினியில் விபரங்களை கொடுத்து விட்டால், யாரிடமிருந்து வாங்கப்பட வேண்டும் என்று கணினியே தீர்மானித்து பொருள் விற்பவரின் கணினிக்குத் தகவல் அனுப்பி விட, இரண்டாவது நாள் காலையில் கேட்டது அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்து விட வேண்டும். இதற்குத் தேவையான வெவ்வேறு கணினிகளில் வெவ்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருள் பயன்பாடுகளை இணைக்கும் வேலைதான் நான் செய்து கொண்டிருப்பது".

    இது எழுது பொருளுக்கு மட்டும். இதைப் போல் ஆயிரக் கணக்கான பொருட்களுக்கு வளர்ந்து விட்ட சமூகங்களிலேயே கணினி மயமாக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

  2. உலகமயமாக்கத்தின் விளைவாக அந்தச் சமூகங்களுடன் வணிக உறவு வைத்திருக்கும் பிற நாட்டு நிறுவனங்களும் கணினியின் மூலம் தகவல்களை கையாளும் தேவை பெருகி இந்தியா, சீனா, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகளில் இன்னொரு தளத்தில் கணினிகளின் பரவல் நடக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி தொழில் புரியும் தோல் துறையினர், துணி துறையினருக்கு தமது வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வதற்கு கணினி பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.

  3. வளரும் நாடுகளின் உள்ளூர் பயன்பாட்டுகளுக்கு கணினிகளை ஈடுபடுத்துதல் மிகச் சிறிதளவே தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் ரயில் துறை, வங்கிகள், சில அரசு துறைகள் என்று கணினியை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். நம்ம ஊரிலும் வளர்ந்த நாடுகள் அளவுக்கு கணினி மயமாக்கம் செய்யும் பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேலே சொன்னது போல இணைய வசதிகள் பரவுவதன் மூலம் விலையுயர்ந்த கணிப்பொறிகளை வாங்கும் தேவை இல்லாமலேயே கடைநிலையில் இருப்பவருக்கும் கணினிச் சேவை கிடைக்கச் செய்ய வாய்ப்புகள் உருவாகின்றன.
இவற்றை மட்டும் சேர்த்துப் பார்த்தால் மென்பொருள் உருவாக்கத்துக்கு புதிய முறைகள் கண்டு பிடிக்கப்பட்டால் ஒழிய அடுத்த இரண்டு தலைமுறைக்கு கணினித் துறையில் பணி புரிய ஆட்களுக்குத் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

மற்ற தொழில் துறைகளைப் போல இல்லாமல் மென்பொருள் உருவாக்கத்தில் மனித உழைப்பின் பங்கு பிற மூலதனங்களை விட அதிகம். 50,000 ரூபாய்க்கு கணினி கட்டமைப்பை உருவாக்கினால் அதில் வேலை செய்யும் கணினி வல்லுநருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் கொடுக்கும் நிலை இருக்கிறது. கோடிக் கணக்கான மதிப்புள்ள இயந்திரத்தை இயக்கும் தொழிலாளிக்குக் கூட சில ஆயிரம் ரூபாய்கள்தாம் ஊதியம் கிடைக்கும் உற்பத்தித் துறைக்கு மாற்றாக இதைப் பார்க்கலாம்.

இது வரை சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கும் பணிகளை அப்படியே வைத்துக் கொண்டு அவற்றின் மீது புதிய பணிகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையில். நடைமுறையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மென்பொருள்களில் பல இன்றைய பயன்பாட்டுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புதிய வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

கணினி மென்பொருட்கள் மூலமாக ஒரு புதிய சிந்திக்கும் இனத்தை உருவாக்கி வருகிறோம். உயிரினங்களில் படிப்படியாக பரிணாம மாற்றங்கள் நிகழ்ந்து சூழலுடன் தகவமைத்துக் கொள்ளும் உயிர்கள் பிழைத்து இன்றைக்கு மென்பொருள் எழுதும் திறனுடைய மனிதர்கள் உரவாகி இருப்பது போல், மென்பொருள் துறையிலும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும் உருவாக்கங்கள் படைக்கப்பட்டு சூழலுக்கு பொருந்தும் மென்பொருட்கள் வளர்ந்து அடுத்த நிலைக்குப் போகின்றன.

மென்பொருள் எழுதுதல் ஒரு படைப்புக் கலை. வழக்கமான கலைத் துறையில் ஓவியம், கதை, கவிதை, திரைப்படம் போன்றவை நம்முடைய மன ஓட்டத்தைப் பாதிப்பதோடு நின்று விடுகின்றன. மென்பொருள் என்ற கலைப்படைப்பு பல கோடி மக்களின் தினசரி வாழ்க்கைப் பணிகளை மாற்றி அமைக்கின்றன.