வர்த்தகம் - business லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வர்த்தகம் - business லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2012

பில் கேட்ஸின் தான தருமங்கள் - ஒரு விமர்சன பார்வை


"பில் கேட்ஸ் கணினி துறையில் தொழில் ரீதியாக சில கஷ்டங்களை கொடுத்தாலும் அவரது தான தருமங்களால் அவை அனைத்துக்கும் ஈடு கட்டி விடுகிறார் என்பதுதான் ஸ்லாஷ்டாட்டில் பொதுவான கருத்தாக இருக்கிறது. அவரது தரும காரியங்கள் சுயநலமற்றவை என்று சொல்ல முடியாது. வழக்கமாக கேட்ஸூக்கு ஆதரவான எட்வீக், கேட்ஸின் அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றியும் பலன் பெறுபவர்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியடையாதது பற்றியும் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது"

ஸ்லாஷ்டாட் விவாதம்

செவ்வாய், 3 ஜூலை, 2012

வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர என்ன செய்ய வேண்டும்?


ஸ்லாஷ்டாட்டை கேளுங்கள்:வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர நான் என்ன செய்ய வேண்டும்?

"ஹாய், எனக்கு 40 வயதாகிறது. மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றில் நான் மூத்த மென்பொருள் உருவாக்குனராக வேலை பார்க்கிறேன். இதுவரை முழு நேர வேலைகள்தான் செய்து வந்திருக்கிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாக அலுவலக அரசியல், அவுட் சோர்சிங், பொருளாதாரச் சூழல் இவற்றின் காரணமாக நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.

நிதித் துறை தத்தளித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு சுற்று வேலை நீக்கங்களை நாம் சீக்கிரமே எதிர் கொள்ளப் போகிறோம். என் குடும்பமோ வளர்ந்து கொண்டிருக்கிறது, என் வாழ்க்கைத் துணை வேலைக்குப் போகவில்லை, எனக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை.

எனது பணி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. 65 வயதானால்தான் மெடிக்கேர் கிடைக்கும் என்பதை வைத்துப் பார்க்கும் போது குறைந்தது இன்னும் 25 ஆண்டுகள் நான் வேலை செய்தாக வேண்டும். வரும் காலங்களில் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறார் இல்கார்.

வியாழன், 28 ஜூன், 2012

சிலிக்கன் பள்ளத்தாக்கும் சுரண்டலைஆரம்பித்து விட்டது


"பில் டேவிடோ சிலிக்கன் பள்ளத்தாக்கின் பழம் பெரும் பார்வையாளர். சிலிக்கன் பள்ளத்தாக்கு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எழுதும் போது, டேவிடோ பெருமைப்படும்படியாக எதுவும் இல்லை என்கிறார். பேஸ்புக், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களை கடும் சொற்களால் தாக்குகிறார். 


'ஜெயித்தவனுக்குத்தான் எல்லாமே என்ற சூழலில் மேலும் மேலும் பணத்தைத் துரத்தும் நிறுவன உரிமையாளர்கள், ஏற்றுக் கொள்ளப்படும் நடத்தையின் விளிம்பில் நடனமாடுகிறார்கள். அவர்கள் விளிம்பிற்கு கொண்டு போகவில்லை என்றால் போட்டியாளர் அதைச் செய்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார். ஏகபோகம் போட்டியாளர் கையில் போய் விடும். இப்படிக் கிடைப்பதுதான் பயனரை சுரண்டி கிடைக்கும் மதிப்பு"



இப்போது ஏன் இந்த மாற்றம் என்று ஆராயும் போது 'முன்பெல்லாம் பெரிய, கறாரான பெரு நிறுவனங்களுடன் உறவாடும் போது சப்ளையர்கள் நேர்மையாக இருந்தார்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்துக்கு விற்றார்கள். வாங்கும் மேலாளர்கள் அதிகாரமும், மறந்து விடாத நினைவுத் திறனும் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரின் நம்பிக்கையை பொய்ப்பித்தால், கடுமையாக தண்டிக்கப்பட்டு வியாபாரத்திலிருந்தே வெட்டி விடப்படுவார்கள். அதுதான் அவர்களை நேர்மையாக நடக்க வைத்தது' என்கிறார் டேவிடோ.

இப்போது நிலைமை மாறி விட்டது. தனிநபர் நுகர்வோரை சுரண்டுவதால் எதிர்மறை பின்விளைவுகளை விட ஆதாயம் அதிகம் கிடைக்கிறது.


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வேலூரில் தகவல் தொழில் நுட்ப சாத்தியங்கள் கருத்தரங்கின் பரிந்துரைகள்.

  1. வேலூரில் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்குத் தேவையான மூன்று அடிப்படை காரணிகள் - மனித வளம், கட்டமைப்பு வசதிகள், செயல்திட்டம்

    a.  தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை திரட்டித் தொகுக்க வேண்டும்.
    b.  மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பராமரிக்க வேண்டும்.
  2. வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான 20 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

    a. பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் வேலூருக்கு வர வைக்கலாம்.
    b. நகரத்தில் ஒரு தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
  3. தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். விஐடி இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    a. வேலூரில் அலுவலகம் ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் ஆரம்ப அலுவலக வசதி, வழிகாட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும்.
    b. மாவட்டத்தில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு பொது அமைப்பு இருக்க வேண்டும்.
    c. அரசாங்கத் திட்டங்களை தொழில் முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
  4. வேலூர் மாவட்டத்தின் சிறப்புப் பண்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் நிறுவனங்களை ஈர்க்கலாம்.

    a. வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். தோல் துறை நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
    b. சிறிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல் திட்டம் வகுக்கலாம்.
    c. சிறு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும்.
  5. அரசு கொள்கைகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.

    a. சிறு நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்க அரசு அங்கீகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
    b. மாவட்ட தொழில் மையத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி வசதிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும்.
    c. வேலூர் நகராட்சி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க சேவை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் (விஐடியின் நிறுவன உருவாக்கச் சேவையைப் போன்று)
ஆங்கிலத்தில்

Recommendations of panel on Vellore as IT destination. 

1. Three necessary factors to enable IT sector in Vellore
a. Human Resources
b. Physical Infrastructure
c. Action plan

Collect and compile database of professionals from Vellore district working in different parts of the world. 
Prepare a database of Engineering colleges in the district and maintain details of students studying and passing out each year.

2. Prepare a 20 years vision document for IT sector in the district. 
a. Encourage Tier II units of companies operating in larger cities to locate in Vellore
b. Establish an IT SEZ in the city.

3. Set up a IT facilities center to help companies looking to establish base in Vellore. VIT can play a major role in this.
a. Soft landing option for companies by providing office infrastructure and initial guidance for setting up base here. 
b. A forum for IT companies in the district to meet and discuss development issues
c. Co-ordinating with government departments to make funds available to entrepreneurs. 

4. Identify unique selling points of Vellore district to promote as an IT destination. 
a. Information Technology needs of industry in the district should be identified and served. Leather sector, Self Help Groups, Educational Institutions can be the target markets
b. Focus on encouraging and facilitating small companies. Set a target of setting up 500 small companies in the city in 5 years time. 
c. Set up the IT SEZ targetting small and medium companies. 

5. A supportive and encouraging government policy is to be prepared and implemented. 
a. Provide recognition to small companies to enable them compete globally.
b. Create an IT division in the District Industrial Center to provide guidance and support with available schemes
c. Encourage new initiatives in the sector through industry forums. 
d. Establish a technology business incubation center by the municipal government (similar to VIT technology incubator)

வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்

இந்து நாளிதழில் செய்தி

வேலூரில் தகவல் தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு கோட்டை மைதானத்தில் நடந்து வரும் நூலாறு 2010 புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறப்பாகவும் செறிவாகவும் நடந்தது.

சென்னை கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஏ ஜே பாலசுப்ரமணியன் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு போன்று தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிற நகரங்களைப் பற்றி விளக்கினார்.

மனிதத் திட்டமிடலில் ஒரு பூங்காவை உருவாக்கலாம், ஆனால் காடு ஒன்று இயற்கையாகத்தான் உருவாக முடியும்.

  • பெங்களூருவில் 1950-60களில் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்போதைய பிரதம மந்திரி நேருவினால் உருவாக்கப்பட்டன. 
  • 1980களில் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டது. 
இப்படி உருவான ஒரு தொழில் நுட்பச் சூழலில் பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவற்றுடன் பெங்களூருவின் கட்டமைப்புகளும் காலநிலைகளும் இளைஞர்களுக்கு விருப்பமாக அமைந்திருந்தன.

தகவல் தொழில் நுட்பத் துறைக்கான சூழல் உருவாக மூன்று காரணிகள் தேவை:

  1. மனிதவளம்
  2. கட்டமைப்பு
  3. வாழ்க்கைத் தரம்

பெங்களூருவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சியினால் அந்த நகரத்தின் வசதிகள் சிக்கலாகி வந்தன. வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்கள் பெங்களூருக்கு அருகில் இருந்த சென்னையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

இப்போது சென்னையும் அத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது. வேலூரைப் பொறுத்த வரை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைச் செலவு இரண்டுமே ஆதாயமாக இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஊர்களில் சென்று பணி புரிகிறார்கள்.

  • இது போன்று வேலூர் பகுதியிலிருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்களின் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
  • இந்தப் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுத்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.
  • வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரும் போது வெளியூரிலிருந்து பல நிபுணர்கள் வல்லுனர்கள் வர வேண்டியிருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைச்சூழல் இருக்க வேண்டும்.
  • குழந்தைகள் படிப்பதற்கு நல்ல கல்லூரிகள், பள்ளிகள் இருக்க வேண்டும்.
  • சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் இங்கு ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
  • கருத்துக்களும் பேச்சுக்களும் செயல்திட்டமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 
  • 15 முதல் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் திட்டம் வகுத்து தொலைநோக்குடன் செயல்பட்டால் சாத்தியமாகும்.

சிறிய அளவில் செயல்பட்டாலும்உலகத் தரத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் வல்லமைகளைப் பயன்படுத்தி சிறப்படைய வேண்டும்.

வேலூர் விஐடி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க மையத்தின் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் பேசும் போது கோயம்புத்தூரின் வளர்ச்சியைப் பற்றி விளக்கினார். லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஆரம்பித்த பிறகு அதைச் சார்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்  உருவாயின. அதிலிருந்து ஒரு தொழில் முனைவு கலாச்சாரம் ஏற்பட்டது. இது போன்று எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் முனைவுதான் அடிப்படை.

ஏற்கனவே பிற நகரங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு வேலூரில் செலவு குறைவு ஆதாயம் இருக்கிறது.

சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் இழப்பு 12% முதல் 15% வரையாக இருக்கிறது. ஹனிவெல் நிறுவனம் சோதனை முயற்சியாக மதுரையில் 500 பொறியியல் பட்டதாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில், ஊழியர் இழப்பு வீதம் 5%த்தை விடக் குறைவாக இருக்கிறதாம்.
இது போன்று வேலூரிலும் சிறு நகர வாழ்க்கையில் நல்ல சம்பளமும் குடும்பத்துடன் வசிக்கும் வாய்ப்பும் இருந்தால் ஊழியர்கள் நிறைவுடனும் ஊக்கத்துடனும் பணி புரிவார்கள்.

பெரிய நிறுவனம் ஒன்று வேலூருக்கு வரும் போது அவர்களுக்கு soft landing என்ற குறைந்த செலவில் அலுவலகம் ஏற்படுத்தும் வசதி இருப்பது பெரிய ஆதாயமாக இருக்கும்.

விஐடியின் தொழில்நுட்ப உருவாக்க மையத்தை அப்படி தொடர்பு கொண்டு கிரான்ஸ்கி மோல்டிங் அண்ட் ஸ்டாம்பிங் என்ற ஜெர்மன் நிறுவனம், விஐடி மையத்தில் தனது பணிகளை செய்ய ஆரம்பித்து அப்போது பள்ளிகொண்டா அருகில் தனது தொழிற்சாலையை ஏற்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களைப் போலவே டாக்ஸ் பிரெஸ்ஸோடெக்னிக் என்ற நிறுவனமும் விஐடி மையத்தில் செயல்பாடுகளை ஆரம்பித்து இப்போது தொழிற்சாலைக்கான நிலம் வாங்கி தயார் நிலையில் இருக்கிறார்கள். வீலன்ட் என்ற மூன்றாவது ஜெர்மன் நிறுவனம் தொழில் சாதக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  • இது போன்று நிறுவனங்கள் soft landing ஆவதற்கான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • விஐடி மையம் அரசாங்கத் திட்டங்களின் மூலம் தொழில் முனைவோருக்குப் பண உதவி செய்து வருகிறது. இது வரை ஒரு கோடியே 20 லட்சம் வரை முதலீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரியும் ஒவ்வொரு ஊழியரும் சுற்றுப் புறப் பகுதிகளில் 4 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தொழில் ஆதாயங்களைப் பயன்படுத்தி தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவத்தை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களையும் பண உதவிகளையும் பயன்படுத்த விஐடி உதவி புரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புது நிறுவன உதவி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 1000 மையங்கள் என்று இலக்கு ஏற்படுத்தப்பட்டு அது வரை சிறு எண்ணிக்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1 $ முதலீடு அரசாங்கத்துக்கு 4$ வருமானம் தருகிறது. வேலூர் நகராட்சி கூட ஒரு இன்குபேட்டர் ஏற்படுத்தலாம்.


மைக்ரோசாப்ட் இந்திய ஆராய்ச்சி மையத்தில் பன்மொழி அமைப்பு ஆராய்ச்சியின் தலைவராக பணிபுரியும் முனைவர் குமரன் மனிதவளம், கட்டமைப்பு, செயல்திறன் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றைத் தாண்டி நிறுவனங்களை வர வைக்க துணிந்து முயற்சி எடுக்கும் (ரிஸ்க் எடுக்கும்) மனோபாவம் உருவாக வேண்டும்.

கலிஃபோர்னியாவில் இருந்த அதே சூழல் போஸ்டனில் இருந்தாலும், கலிஃபோர்னியர்களின் ரிஸ்க் எடுக்கும் மனப்போக்குதான் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. அதே போன்று வேலூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சிறப்பு கவர்ச்சி ஒன்று அடையாளம் காணப்பட வேண்டும்.

15-20 ஆண்டுகளுக்கான நீண்ட காலத் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.

நாராயண்

தொடக்க நிலை நிறுவனங்கள் வெற்றி பெற தொழில் முனைவர்களின், சமூகத்தின் மனப்பாங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்காமல் சிறிய நிறுவனத்தில் பணி புரியும் மனப்போக்கு வேண்டும்.

சென்னையில் வாகன உற்பத்தித் துறை வளர்ந்ததற்கான முக்கிய ஒரு காரணி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் உருவாகி செயல்படுவதுதான். அதைப் போல வேலூரிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறு நிறுவனங்கள் வளர்வது தகுந்த சூழல் உருவாக உதவியாக இருக்கும்.

தொழில் முனைவர்களைப் பொறுத்த வரை, இணையம் மூலமாக cloud computing என்ற கோட்பாட்டின் மூலமாக சேவை வழங்குவதற்கு இருப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய ஊர்களிலிருந்து கூட அவற்றை உருவாக்கி உலகமெங்கும் விற்பனை செய்யலாம்.

விஐடி வேலூரில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. செலவு குறைவாக இருப்பது இன்னொரு காரணம். இந்த ஊரில் இருக்கும் தேவைகளுக்கு சேவைகள் உருவாக்கி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படலாம்.

செந்தில்நாதன்

1. சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று உறுதியான நேர்மையான தலைமையும் தனிநபர் முயற்சிகளும் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும், முனைவும் இருந்தால்தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும்.

2. பெங்களூரு சென்னை நகரங்களின் நிழலில் அந்நகரங்களுக்கு மனித வளத்தை அளிக்கும் பகுதியாக விளங்குகிறது வேலூர் மாவட்டம்.

3. இன்னொரு பெங்களூரு சென்னையாக உருவாகாமல், வேலூரின் தனிச் சிறப்புகளைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

4. 500 சிறு நிறுவனங்களை வேலூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு அமைத்துச் செயல்படலாம்.

நாச்சியப்பா
ஆம்பூர் வர்த்தக மையத்தைப் போன்று ஒரு தகவல் தொழில் நுட்ப மையம் வேலூரில் உருவாக வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வும், நிறுவனங்களுக்கு வசதியும் கிடைக்கும். தொழில் முனைவர்கள் சந்தித்து உரையாட ஒரு பொது இடமும், தகவல் பரிமாறும் வசதியும் கிடைக்கும்.

தோல் துறை, கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் இவர்களுக்குத் தேவையான மென்பொருள் சேவை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன.

பாலாஜி கம்பியூட்டர்சைச் சேர்ந்த திரு குமரன் 

அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான அரசு அமைப்புகள் ஏற்படுத்தவும் முன்முயற்சி தேவை என்று கருத்து தெரிவித்தார்.

வேலூரில் மனிதவளம், தொழில் முனைவு இருக்கிறது. அரசு அங்கீகாரமும், உதவிகளும், வழிகாட்டலும் தேவையாக இருக்கிறது.


விஐடி இது போன்று மென்பொருள் தகவல் மையம் ஒன்றை உருவாக்க முன்வரலாம். ஏற்கனவே 50-60 பிபிஓ நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

வேலூர் கலந்துரையாடல் - அறிமுகக் குறிப்புகள்

தங்களது பல வேலைகளுக்கிடையே இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களையும், வேலூரின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பணி செய்து வரும் வேலூர் தகவல் தொழில் நுட்ப அமைப்பினரையும், தொழில் முனைவர்களையும், அரசு அதிகாரிகளையும் இந்தக் கருத்தரங்குக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கருத்தரங்கின் நோக்கம், சிறு நகராகக் கருதப்படும் வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கான சூழல்களைப் பற்றிய ஒரு ஆரோக்கியமான கருத்தாக்கத்தைத் தொடங்கி வைப்பது.  இது தொடர்பாக சில தகவல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், அரசியல் பிரநிதிகள், அமைச்சர்களின் முன் முயற்சிகளினாலும் வேலூரில் ஒரு ஐடி பார்க் அமைப்பதற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கின்றன.

2. வேலூர் இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கும் இந்தியத் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் கணிசமான பங்கு வகிக்கும் சென்னைக்கும் நடுவில் strategic ஆக அமைந்துள்ளது. சென்னை - பெங்களூர் நான்கு வழி நெடுஞ்சாலை, வேலூரிலிருந்து இந்த பெருநகரங்களுக்குப் போய் வருவதை இரண்டு மணி நேரங்களுக்குட்பட்ட பயணமாக குறுக்கியிருக்கிறது.

சென்னைக்கும் வேலூருக்கும் இடையேயான தூரம் நூற்றிச் சொச்சம் கிலோமீட்டர்களாக இருந்தாலும், வேலூர் சென்னையிலிருந்து கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த வரை எந்த அளவு ஓடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது என்பது ஒரு முக்கியமான பொருள்.

இதைப் பற்றி வழிகாட்டப் போகிறவர் தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட திரு A J பாலசுப்பிரமணியன். 1985ல் கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்று அடுத்த 12 ஆண்டுகளில் அப்பளைட் டாடா சிஸ்டம்ஸ் மற்றும் ஹார்ட் சாஃப்ட் மைக்ரோஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனங்களை உருவாக்கி நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு வரை மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மூத்த பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் என்ற 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளராக செயல்படுகிறார்.

3. வேலூரின் மகுடத்தில் கோகினூர் வைரமாக மின்னும் விஐடியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் இன்று நம்மிடையே தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். திரு பாலச்சந்திரன் 20 ஆண்டுகளுக்கும் மேல் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிந்து வருகிறார். விஐடி டெக்னாலஜி இன்குபேஷன் மையத்தை ஆரம்பித்ததிலிருந்து (2003 ஆம் ஆண்டு) அதன் பொறுப்பாளராக இருந்து 20 புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழிகாட்டலும், உதவியும் செய்திருக்கிறார்.

4. தகவல் தொழில் நுட்பம் என்பது வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்கு மட்டும் என்றில்லாமல், வளர்ந்து வரும் நாடுகளின் சூழலுக்கேற்ற, நமது தேவைகளை பூர்த்தி செய்யும் படி பயன்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதைப் பற்றி,  அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணி புரிந்து, இந்தியாவுக்கு மிகவும் தேவையான பன்மொழி கணினி அமைப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் குமரன் பேச இருக்கிறார். முனைவர் குமரன் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி பட்டம் பெற்று, அமெரிக்காவில் பெல் கம்யூனிகேஷன், ஆரக்கிள் கார்பொரேஷன் போன்ற முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் இந்திய ஆராய்ச்சிப் பிரிவின் பொது மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

5. வேலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலர் திரு மோதிலால் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

வேலூரில் புதிதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கி வரும் திரு நாராயண் தனது கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த திரு நாராயண், கடந்த 10 ஆண்டுகளில் விண்ஊஞ்சல், 360 டிகிரி இன்டர்ஆக்டிவ் என்று புதுமையான மென்பொருள் நிறுவனங்களை தொடங்கி நடத்திய பெருமை உடையவர்.

6. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடுதல், காலணி முதலான தோல் பொருட்கள் உற்பத்தி என்று ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான கோடி அன்னியச் செலாவணி ஈட்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தோல் துறைக்கு மென்பொருள் சேவை அளிப்பதற்காக பிஎஸ்ஜி லெதர் லிங்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நான் இந்த கருத்தரங்களை தொகுத்தளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

இந்த மாவட்டத்திலும் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலூர் நகரிலும் டார்லிங் குழுமம் போன்ற வணிக நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

7. முத்தாய்ப்பாக வேலூர் நண்பர்களின் ஊர் பாசம். நூலாறு 2010 என்ற தலைப்பில் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி ஒன்றை இந்த மாவட்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்று அரும் சாதனையைச் செய்து கொண்டிருக்கும் ஆழி அறக்கட்டளையின் திரு செந்தில்நாதன்,  இந்தக் கருத்தரங்கில் தமது பங்களிப்பை வளங்குவார்.

முதலில் பேச்சாளர்கள் தத்தமது ஆரம்ப உரையை 10 நிமிடங்களுக்குள் சுருக்கமாக வழங்குவார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் உருவில் விவாதம் தொடரும்.

இந்த விவாதம் ஒலி/ஒளி வடிவில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் விளைவாக ஒரு செயல்திட்டம் உருவாக்கி வெளியிடுவது என்பது நோக்கம்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

தமிழில் தொழில் நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் செய்வது

செப்டம்பர் 28ம் தேதி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நடந்த கட்டற்ற தமிழ்க் கணிமை கருத்தரங்கில் நடந்த கலந்துரையாடலுக்கான குறிப்புகள்.

தொழில் நிறுவனங்களுக்கு தமிழில் மென்பொருள் பயன்பாடுகள் தேவையா? என்ற கேள்வி முதலில் எழும். தொழில் நிறுவனங்களையும், நிறுவனங்களின் செயல்பாடுகளின் பிரிவுகளையும் பார்த்து இதற்கு விடை சொல்ல முயற்சிக்கலாம்.

தமிழில் மென்பொருட்களுக்கான சந்தை - தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா போன்ற தமிழ் பேசும், தமிழ் அலுவல் மொழியாக இன்னும் இருந்து வரும் நாடுகளில் இருக்கிறது.

மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது.

நிறுவன வகைப்பாடுகள்

  • பெரிய நிறுவனங்கள், ஏற்கனவே மென்பொருள் பயன்பாடுகளை பெருமளவு பயன்படுத்துபவர்கள். இந்த மென்பொருள் பயன்பாடுகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • நடுத்தர நிறுவனங்கள், நிறுவனத்தில் சில செயல்பாடுகளுக்கு மென்பொருட்களை பயன்படுத்துபவர்கள். இவையும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.
  • சிறு நிறுவனங்கள். நிறுவன மேலாண்மைக்கு மென்பொருள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள். 

செயல்பாட்டுப் பிரிவுகள்

  • கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல்
  • பொருள் வரத்து, செலவு, சரக்குக் கையிருப்பு
  • இயந்திரங்கள் பராமரிப்பு, உதிரிப் பாகங்கள்
  • ஊழியர் வருகைப்பதிவு, சம்பளப் பட்டியல், பணி வாழ்க்கை விபரங்கள்
  • உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக்கட்டுப்பாடு
  • ஏற்றுமதி, உள்ளூர் விற்பனை மேலாண்மை
  • விற்பனையாளர்களுடனும் வாடிக்கையாளருடனும் தகவல் பரிமாற்றம்
இன்றைய நிலைமை என்ன என்று பார்ப்போம். 


  1. கணக்கியல் மற்றும் நிதித் திட்டமிடல் எல்லா நிறுவனங்களுக்குமே மென்பொருள் பயன்பாட்டில் செய்யப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். நடுத்தர நிறுவனங்களில் சொந்தமாக டேலி வாங்கி நிறுவிக் கொள்கிறார்கள். சின்ன நிறுவனங்களின் கணக்காளர்/தணிக்கையாளர் விபரங்களை வாங்கி அவர்களது அலுவலக டேலி மென்பொருளில் உள்ளிட்டு அறிக்கை எடுத்துக் கொடுக்கிறார்கள்.

    இப்படி எல்லா நிறுவனங்களுமே கணினி வழி பயன்பாட்டில் போனதற்கு முக்கிய காரணம், அரசாங்க விதிமுறைகளும், அதைப் பின்பற்ற வேண்டியதற்கான தேவைகளும் டேலி போன்ற மென்பொருட்களில் பூர்த்தியாவதால்தான்.
  2. வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மின்னஞ்சல் எல்லோருமே பயன்படுத்துகிறார்கள்
  3. ஏற்றுமதி ஆவணங்கள் தயாரிக்க மிகக் குறைந்த அளவில் மைக்ரோசாப்டு ஆஃபிஸ் பயன்பாட்டில் வார்ப்புருக்கள் ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களைத் தவிர்த்த பிற நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில் பொதுவாக மென்பொருள் பயன்பாடுகளை ஒரு செலவினமாகத்தான் பார்க்கிறார்கள் - முதலீடாக பார்ப்பதில்லை. அதனால், அரசாங்க சட்டங்கள், வாடிக்கையாளர் தேவை என்று கட்டாயம் வந்தால் தவிர கணினி அல்லது மென்பொருள் பயன்பாட்டில் முதலீடு செய்வதில்லை.

மென்பொருள் பயன்பாடுகளின் பலன்களை நேரடியாக நிறுவன உரிமையாளர்களும் தலைமை மேலாளர்களும் பயன்படுத்தி உணர முடியாததால், தரவு உள்ளிட சில ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கும் ஊழியர் மூலமாகவே மென்பொருள் தேவைகளை எடை போடுகிறார்கள்.

நிறுவன உரிமையாளர்களும், தலைமை மேலாளர்களும் நேரடியாக மென்பொருள் பயன்பாடுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான பெரிய தடைகள்

  1. பயனர் இடைமுக மொழி தமிழில் இல்லாமல் இருப்பது
  2. பயன்பாட்டின் வடிவமைப்பு அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது. 

என்ன தீர்வு?

இந்த இரண்டுக்கும் தீர்வு காண, நம்ம ஊரின் தேவைகளுக்கேற்ப புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன.

கூகுள் தேடல் வந்து ஏற்கனவே கல்லா கட்டிக் கொண்டிருந்த யாஹூவையும் அல்டாவிஸ்டாவையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது போல, ஜிமெயில் மூலமாக மற்ற இணையப் பக்கவழி மென்பொருள் சேவையில் முந்தி விட்டது போல நம்ம ஊர் சூழலிலும் புதிய ஒரு மென்பொருள், பயனர்களுக்கு ஏற்றபடி செயல்படும் வடிவமைப்புடன் வந்தால் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டேலி போன்றவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடலாம்.

எந்த மாதிரியான துறைகள் இருக்கின்றன:

  1. முதன்மைத் துறை
    விவசாயம், மீன்பிடித்தல், தோட்டத் துறை, சுரங்கத் துறை
  2. தொழில் துறை
    உற்பத்தி நிறுவனங்கள் - வாகன உற்பத்தி, காலணி உற்பத்தி, விளையாட்டுப் பொருட்கள் செய்வது போன்றவை
  3. processing நிறுவனங்கள் - சாயமூட்டும் தொழிற்சாலை, அச்சுத் தொழில் போன்றவை, தோல் பதனிடுதல்
  4. சேவைத் துறைகள்
    விற்பனைக் கடைகள் - கட்டிடப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துக் கடை, தின்பண்டக் கடை, துணிக்கடை, ஃபேன்ஸி கடைகள், பால்,
  5. சேவை நிலையங்கள்
    உணவகங்கள், தங்கும் விடுதிகள், துரித அஞ்சல் சேவைகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், திரைப்பட அரங்குகள்
  6. திரைப்படத் தயாரிப்பு, பதிப்பகம், தரகு வியாபாரம், கட்டுமானத் துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள்

இந்தச் சந்தையின் அளவு என்ன?
ஒரு ஒப்பீடு

தமிழ் நாட்டின் மக்கள் தொகை - 70 மில்லியன்
தமிழ் நாட்டின் மென்பொருள் சந்தை மதிப்பு - 5 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி, உள்ளூர் நுகர்வு???

அமெரிக்காவின் மக்கள் தொகை - 300 மில்லியன்
அமெரிக்காவின் மென்பொருள் சந்தை மதிப்பு - 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தலைக்கு 450 டாலர்கள் = 20000 ரூபாய்கள்)

இத்தனை கோடி மதிப்பிலான மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு விற்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இது ஏற்கனவே தயாராக இருக்கும் சந்தை இல்லை. இதில் இறங்குபவர் துணிந்து பணத்தையும் நேரத்தையும் செலவழித்து சந்தையை உருவாக்க வேண்டியிருக்கும்.

ஏற வேண்டிய மலைகள்

மென்பொருள் பணிச்சூழல் ஒன்று உருவாக்க வேண்டியிருக்கும்

1. தொழில்/வணிக நிறுவனங்களுக்கான மென்பொருள் பயன்பாட்டுக்கான கணினி வடிவமைப்பு
2. தொழில் வணிக நிறுவனங்களுக்கான  மென்பொருள் பயன்பாடுகளை இயக்கத் தேவையான இயங்குதளம்
3. மென்பொருள் பயன்பாடுகள் பல
பயன்பாடுகளுக்குத்தான் கணினி வாங்குகிறார்கள்

விற்பனை வழிமுறைகள்

  1. பெட்டியில் பயன்பாடு - கணினி பயன்படுத்தாத அல்லது மற்ற கணினிகளை விட்டுப் புதுக்கணினியில் பயன்படுத்த விரும்புபவர்களுக்குப் பெட்டியை வாங்கிப் போய் மின்னிணைப்புக் கொடுத்து இயக்கினால் பயன்பாடு செயல்படும்படியான வசதி
  2. கணினியில் நிறுவிப் பயன்படுத்தும் குறுந்தகடு
  3. கணினியில் மாயச் சூழலில் பயன்பாடு - குறுவட்டு ஒன்றில் பயன்பாடு இயங்கத் தேவையான சூழல் மென்பொருட்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி வினியோகித்தால், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தை பாதிக்காமல் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வசதியை அளிக்கலாம்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

வேலூரில் தகவல் நுட்பத் துறை கருத்தரங்கம்

வேலூரில் மென்பொருள் துறை நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் - கருத்தரங்கு

நாள் - செப்டம்பர் 4, 2010
நேரம் - மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் - வேலூர் கோட்டை மைதானம், நூலாறு புத்தகக் கண்காட்சியின் பகுதியாக

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கோட்டைகளான பெங்களூருவுக்கும் சென்னைக்கும் நடுவில் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுவதற்கான ஆதாயங்கள் இருக்கின்றன.

மாவட்டத் தலைநகராக, ஒரு சிறுநகராக கருதப்பட்டு வரும் வேலூரில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும், அரசாங்கம் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் கருத்து என்ன, இங்கு இருக்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நோக்கங்கள் என்ன?

சென்னை அல்லது பெங்களூருவில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஒன்று வேலூரில் மென்பொருள் உருவாக்க மையம் ஏற்படுத்த வேண்டுமானால் என்னென்ன எதிர்பார்ப்பார்கள்?

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான தகவல் தொழில் நுட்பத் தேவைகள் இருக்கின்றன?

இவற்றை விவாதித்து ஒரு செயல்திட்டம் வகுக்கும் நோக்கத்தில்

1. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கும் மனிதவளம் பற்றிய தகவல்கள் - மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரி பிரதிநிதி
2. வேலூரில் நிறுவனக் கிளை ஏற்படுத்தத் தேவைப்படும் வசதிகள் - சென்னை/பெங்களூருவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதி
3. வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்கி நடத்தும் நடைமுறைச் சாத்தியங்கள் - வேலூரில் செயல்படும் சிறு நிறுவன பிரிதிநிதி
4. வேலூர் மாவட்ட நிர்வாகம் மென்பொருள் நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முடியும் - மாவட்ட நிர்வாகப் பிரதிநிதி
5. வேலூரைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தேவைகள் - வேலூரைச் சார்ந்த வணிக /தொழில் நிறுவனப் பிரதிநிதி
6. தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்குவதற்கான தேவைகள் - தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்.

என்று ஆறு பேர் கொண்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் நகரின் கல்லூரி மாணவர்கள், வேலூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், வேலூரில் மென்பொருள் நிறுவனம் தொடங்க விரும்பும் தொழில் முனைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

விறு விறுவென்று நடக்கட்டும்

அடுத்ததாக சோதனை வழிகளை பட்டியலிடுவது. (Test Cases)
  1. எல்லா விபரங்களையும் பொருத்தமாக உள்ளிட்டால் சரியாக சேமிக்கப்பட்டு அறிக்கைப் பக்கத்தில் காண்பிக்கிறதா?
  2. வாடிக்கையாளர் பட்டியலில் விற்பனையாளர் பெயரைக் காண்பிக்கக் கூடாது.
  3. பொருளின் பெயரைக் குறிப்பிடாமல் உள்ளிட முயன்றால் என்ன நடக்கிறது/
என்று நூற்றுக் கணக்கில் எழுதிக் கொள்ள வேண்டும். எத்தனை சோதனைவழிகளைக் குறிப்பிடுகிறோமோ அத்தனை நம்பிக்கையுடன் மென்பொருளை வெளியிட முடியும்.

இனிமேல் நிரல் எழுதுவது. (Coding)

ஜாவா குருக்கள், பிஎச்பி பிஸ்துகள், டாட்நெட் தாதாக்கள் இறங்கி விளையாட வேண்டிய கட்டம். ஒரே வரையறையை ஒருவர் 200 வரிகளில் செய்து காட்டலாம், இன்னொருவர் முப்பது வரிகளில் முடித்து விடலாம். கவிதை எழுதுவது போல, ஓவியம் வரைவது போல கணிமொழியின் கூறுகளை எப்படிப் பயன்படுத்தி அழகான நிரல் எழுதுவது என்பது எல்லோருக்கும் வந்து விடும் ஒன்று கிடையாது.

அடுத்ததாக எழுதியதை நிரலாளரே ஒரு தடவை சரிபார்த்து விட்டு சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இங்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த குழு இருக்க வேண்டும். இவர்கள் அனுமதித்தால்தான் வெளியே எந்த பதிப்பும் போக வேண்டும். மேலே பட்டியலிடப்பட்ட சோதனை வழிகளுடன் கூடவே அவர்களும் தமக்குத் தோன்றிய முறைகளில் சோதிப்பார்கள். (Unit Testing)

ஏற்கனவே இருக்கும் மென்பொருளில் புதிய கூறு சேர்த்தல் அல்லது மாறுதல் செய்தால் இந்தப் பகுதியைச் சோதித்ததோடு இல்லாமல் பிற பகுதிகளையும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது போல ஒரு மூலையில் ஏதோ மாற்றப் போக இன்னொரு மூலையில் புட்டுக் கொள்ளும் அபாயம் எப்போதுமே இருக்கும். அதை அடையாளம் கண்டு சரி செய்வதும் திட்டமிட்டு செய்யப்பட வேண்டும். (Integration Testing)

இப்படி உருவான நிரலை ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு அல்லது புதிதாக நிறுவ வேண்டிய இடத்துக்கு எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொதி போடுதல் (Packaging) அடுத்தக் கட்டம். என்னென்ன கோப்புகள், என்னென்ன நிரல்கள் என்று ஒரு பொதியாகப் பொதிந்து அதை பிரித்து சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் நிரலையும் இணைத்து வாடிக்கையாளர் சேவைப்பிரிவினர் (Service Team) கையில் போகும்.

அவர்கள் முன்னெச்சரிக்கையாக அலுவலகத்திலேயே இருக்கும் அந்த வாடிக்கையாளரின் தற்போதைய நிரல் தொகுப்பின் இந்த மாறுதல்களை ஓட்டிப் பார்த்து சிக்கல் எதுவும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொள்வார்கள். வாடிக்கையாளரின் கணினி இணையத்தில் இணைந்திருந்தால் அப்படி இணைந்தோ, அல்லது நேரடியாகப் போயோ இந்த மாறுதல்களை அவர்களது கணினியில் ஏற்றி விடுகிறோம்,.

'என்னென்ன மாற்றியிருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்' என்று விளக்கி விட்டு அவர்களிடம் ஒரு புரிதல் அத்தாட்சி வாங்கிக் கொண்டு வந்து விடுவோம்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் பயன்படுத்த ஆரம்பித்து சரியான பின்னூட்டம் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் சின்ன ஐயங்களை தொலைபேசியிலும், இன்னும் சிக்கலானதை மின்னஞ்சல் மூலம் மாற்றம் அனுப்பியோ, நேரிலோ தீர்த்து வைக்கிறோம்.

வேலையில் இறங்குவோம்

இதற்கு வழிமுறையாக
  • நிறுனப் பெயர்களை, வணிக விபரங்களை ஒவ்வொரு முறையும் உள்ளிடத் தேவையில்லாமல் ஒரு பொதுவான இடத்தில் (master) போடச் சொல்லி, தேவை விபர உள்ளிடலில் தேர்ந்தெடுக்க வைப்போம்.

  • இதே போன்று பொருள் பட்டியல் (product master), நிறப்பட்டியல் (colour master) போன்றவற்றுக்கும் பொதுவான பட்டியல் உருவாக்கிக் கொள்வோம் என்று தீர்மானிக்கிறோம்.

  • நாளை இந்த வடிவத்தில் உள்ளிடச் சொல்வோம்.
  • அளவுக்கு என்ன அலகைப் பயன்படுத்த வேண்டும், விலைக்கு எந்த நாட்டுப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வாங்க வேண்டும்.
இப்படி தொழில் நுட்பமுறைகளைத் தீர்மானித்த பிறகு தரவுத் தள வடிவமைப்பில் இறங்க வேண்டும்.
  1. வாடிக்கையாளர், விற்பனையாளர், வங்கி, என்று யாராக இருந்தாலும் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்கும், முகவரி இருக்கும், நம்முடன் என்ன உறவு என்று இருக்கும்.
    எனவே வாடிக்கையாளர், விற்பனையாளர் என்று தனித்தனி இடத்தில் சேமிக்காமல் ஒரே இடத்தில் எல்லா பெயர்களையும் வைத்துக் கொண்டு அவர்களது முகவரி விபரங்களுக்கு ஒரு பட்டியும் (table), உறவு விபரங்களுக்கு (relationships) இன்னொரு பட்டியும் உருவாக்குவோம் என்று தீர்மானிக்கிறோம்.



  2. தேவை விபரம் (order details) உள்வாங்கும் போது வாங்குபவர் (Buyer) என்ற உறவு இருக்கும் நிறுவனப் பெயர்களை மட்டும் எடுத்துக் காட்டி அந்தத் தேவை விபரங்கள் பட்டியில் அந்த உறவுக்கான எண்ணை மட்டும் சேமித்து வைப்போம்.
    தேவைப்படும் போது இந்த மூன்று பட்டிகளையும் இணைத்து வாடிக்கையாளர் நிறுவனப் பெயரை எடுக்கலாம் என்று தீர்மானிக்கிறோம்.

  3. வணிக விபரங்களை (commercial details) ஒரு பட்டியில் போட்டு ஒரு வரிசை எண் (Serial Id) உருவாக்கி, இன்னொரு பட்டியில் பல்வேறு பொருட்களின் விபரங்களையும், அளவு, நாள் விபரங்களையும் சேமிப்போம் என்று முடிவு செய்கிறோம்.

  4. விலை விபரங்கள் (price details) குறிப்பிட்ட மேலாளர்களுக்கு மட்டும்தான் தெரிய வேண்டும் என்று இருப்பதால் தரவுத் தள அளவிலேயே விலையைத் தனிப் பட்டியில் சேமித்துக் கொள்வோம்.
    பயன்பாட்டு நிரலிலோ (application program), தரவுத் தளக் கருவிகள் (database tools) மூலமாகவோ விலை விபரங்களை யார் பார்க்கலாம் என்று கட்டுப்படுத்த முடிந்தாலும் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காக தனிப் பட்டியில் சேமிப்போம்.
இப்படி பல முடிவுகளை எடுக்கிறோம். இந்த வடிவமைப்பு முடிவுகளில் சரி தவறு என்று எதுவும் இல்லை. எது அதிகப் பொருத்தமானது என்றுதான் சிந்திக்க வேண்டும். அதனால் வேலை எப்போதுமே முழுமையாக முடிந்து விடாது, அதற்காகக் காத்திருக்கவும் கூடாது, ஆனால் செய்த வேலையை மேம்படுத்துவதையும் நிறுத்தி விடக் கூடாது.

நிரலில் என்னென்ன நிரல்செயலிகள் எழுத வேண்டும், தரவுத் தளத்துடன் இணைய, உள்ளிட, வெளியெடுக்கத் தேவையான செயலிகளை ஒரு தொகுப்பாகவும் (Database Class), பக்கக் கூறுகளை காட்ட ஒரு தொகுப்பு (Page Class), படிவப் பகுதிகளைக் காட்ட ஒரு தொகுப்பு (Form Class) என்று முடிவு செய்கிறோம்.

மென்பொருள் உருவாக்கம்

ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வந்த தோல் தேவை விபரங்களை (purchase order) உள்வாங்கிச் சேமிக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.

இதற்கான வழிமுறைகள்:
  1. இடைமுக வடிவம்
  • வாடிக்கையாளர் நிறுவனப் பெயர் (company name)
  • அவர்களது முகவரி, (address)
  • அவர்களிடம் பணம் வாங்கும் முறைமை (payment term)
  • பொருளை அனுப்பும் முறைமை (shipment term)
  • பொருளை அனுப்பும் வழி, (shipment mode)
  • சேர வேண்டிய துறைமுகம் (port of destination)
  • தேவை நாள், (order date)
  • வந்து சேர்ந்த விபரம் (order reference)
போன்ற வணிக விபரங்களை வாங்க வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் வாங்கப் போகும் பொருளின் விபரங்களை உள் வாங்க வேண்டும்.
  • பொருளின் பெயர் (தோல் வகையின் பெயர்),
  • அதன் பண்புகள் (நிறம், தடிமன், அளவு, தரம்),
  • எவ்வளவு சதுர அடி வேண்டும்,
  • என்ன விலை,
  • என்றைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,
  • இது போக தரக் கட்டுப்பாட்டுக் குறிப்புகள்,
  • முன்மாதிரி அனுப்பும் தேவை குறித்த குறிப்புகள்
இவற்றை சேமிக்க வேண்டும்.

ஒரு பக்கத்தின் மேற்பகுதியில் பொதுவான வணிக விபரங்களையும், கீழ்ப்பகுதியில் ஏழெட்டு பொருள் விபரங்களை உள்ளிடும் வசதியும் கொடுக்க வேண்டும்.
  • விபரங்களை உள்ளிட்டு சேமித்த பிறகு, உறுதிப்படுத்தலாக விபரங்களை வெளியிலெடுத்துக் காண்பிக்க ஒரு அறிக்கை
  • இதுவரை உள்ளிட்டு இன்னும் பொருள் அனுப்பி வைக்கப்படாத தேவைகளைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்த எல்லா தேவைகளின் விபரங்களைப் பார்க்க ஒரு அறிக்கை,
  • இது வரை வந்து பொருள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் விபரங்கள்
என்று அறிக்கைகளும் உருவாக்கப்பட வேண்டும்.

இதுதான் தேவையான மென்பொருளின் வடிவம்.

இதற்கான படிவங்களை உருவாக்கி, அறிக்கைகளின் படம் போட்டு பயன்படுத்தப் போகும் வாடிக்கையாளரிடம் காண்பித்தால் அவர் தனது கருத்துக்களைச் சொல்லலாம். அதன் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்த பிறகு, நுட்ப விபர ஆவணம் எழுத ஆரம்பிக்கலாம்.

கதையின் தொடர்ச்சி

உரிமையாளர்களுக்கு உடனடிப் பலன் கிடைக்கும் விதமாக மென்பொருள் திட்டம் கிடைத்து விட்டது.

ஆனால், மென்பொருளை உருவாக்கிய பிறகு எப்படி அதை நடைமுறைப்படுத்துவது என்பதில் சுணக்கங்கள். முன் அனுபவம் இல்லாததால் 'மென்பொருளை நிறுவிப் பயன்படுத்த வைத்து பலன் வருவது வரை எங்கள் பொறுப்பு அதற்கு இத்தனை ஆயிரம் ரூபாய்கள்' என்று பேசியதில், முடியவே செய்யாத பொறுப்புகளை எடுக்க வேண்டி வந்தது.

அப்படி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்ததில் மென்பொருள் ஒரு விற்பனைப் பொருளாக முழுமை அடைந்தது. கிட்டத்தட்ட 20 நிறுவனங்களில் நிறுவிச் செய்து கொடுத்ததலில் பல நுணுக்கங்கள் இடம் பெற்று விட்டன.

இனிமேல்
  • செய்யும் வேலைக்கு சரியாக காசு வாங்கி,வேலை செய்யும் ஊழியருக்கு மென்பொருள் துறையில் பொதுவாக கிடைக்கும் அளவுக்கு ஊதியம் வழங்கி சேவை அளிக்க வேண்டும்.
  • அதற்கு வாடிக்கையாளரை எப்படி அணுக வேண்டும் என்று அலசி,
  • இதைச் செய்தால் இவ்வளவு ஆதாயம் கிடைக்கலாம். அதைச் செய்ய எங்களுக்கு இவ்வளவு செலவாகும் என்று பேச ஆரம்பித்ததும்
வழி மலர்ந்து விட்டது.

இந்த எல்லா மாற்றங்களுக்கிடையேயும்,
  • நிறுவனங்களை இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும்,
  • வீணான நேர விரயங்களைத் தவிர்த்தல்
  • ஒரே விபரத்தைத் திரும்பத் திரும்ப உள்ளிடுவதால் வரும் தவறுகளை தவிர்த்தல்,
  • எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்டவர்கள் விபரங்களைப் பார்க்கும் வசதி
என்ற அடிப்படை நோக்கங்கள் வடிவமைப்பில் இடம் பிடித்துக் கொண்டிருந்தன.

இடைமுகம் பல மொழிகளிலும் மாற்றும் வசதி இருக்க வேண்டும் என்பதையும் செயல்படுத்திக் கொண்டோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

நடுவில் கொஞ்சம் கதை

சென்னையில் இருக்கும் ஒரே ஒரு நிறுவனம் இதை பயன்படுத்த ஆரம்பித்து அலுவலகத்தில் உள்ளிடப்படும் தகவல்களை அதன் உரிமையாளர் வீட்டில் கூடப் பார்க்கும் வசதியை பயன்படுத்தினார்கள்.

அந்த நிறுவன உரிமையாளர் ஸ்பானிய வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால் இணையத்தில் தகவல் பரிமாறுவது வசதியில்லை என்று அந்த வாடிக்கையாளரும் மறுத்து விட்டார்.

சென்னைக்கு வெளியே இணைய இணைப்பு வசதி மோசமாக இருந்தாதால் யாரும் அருகில் கூட வரவில்லை. அகலப்பட்டை அதோ வருகிறது, இதோ வருகிறது என்று சொல்லி இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் பிடித்தன.

இதே பாணியில் விற்பனை செய்ய முயன்று இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த முறையில் இருந்த பெரிய குறைபாடுகள்:
  1. இணைய இணைப்பு எல்லா இடங்களிலும் பரவலாக இல்லாததால் பயன்படுத்த முன்வருபவர்கள் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தார்கள்.

  2. இணையக் கணினியில் தகவல் போட்டு வைத்தால் யாராவது வந்து திருடிச் சென்று விடுவார்கள், நமது தொழில் நுணுக்கங்கள் வெளியே தெரிந்து போகும் என்று தயக்கம் பலரை ஓட வைத்தது.

  3. எங்களிடமும் அந்தக் காலகட்டத்தில் அடிக்க ஆரம்பித்திருந்த தொழில் முறை தகவல் பரிமாற்ற அலையைப் (Business Information Transfer) புரிந்து கொண்டு மென்பொருளாக உருவாக்கி விற்கத் திறமையான மென்பொருள் பின்னணியினர் இல்லை.

  4. டாட்காம் காலங்களில் உருவான போர்ட்டல் எனப்படும் குறிப்பிட்ட துறைக்கான வணிகத் தளங்களைப் போலவே குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் உள் நுழைக்க வைப்பது வேலைக்கு ஆகவில்லை. தொழிற்சாலையின் சரக்கு விபரங்கள், வேலை முறைகள், கணக்கு வழக்குகள் எல்லாமே குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட தகவலை மட்டும் கணினியில் போட்டு இணையம் மூலம் பரிமாறிக் கொள் என்பதில் பெரிய சிக்கல் இருந்தது.

    இந்தத் தகவல்களை உள்ளிடுவது தினசரி வேலைகளுக்குக் கூடுதலாக, கணக்குக் குறிப்பேட்டில் எழுதிய பிறகு செய்யும் அதிக பணியாக ஆகி விட்டது. அதனால் சரியான நேரத்தில் சரியான விபரம் உள்ளிடப்படாமல் அறிக்கைகள் பயனற்றுப் போய் விட்டன.
வாடிக்கையாளர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று, மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி அவர்களது உள்ளுறைக் கணினிகளில் நிறுவிக் கொடுத்து விட்டோம்.

சரக்கு விபரங்கள், ஆதாய/இழப்புக் கணக்குகள், வாடிக்கையாளர் விபரங்கள் போன்றவற்றை திரட்டி அறிக்கை தரும் பயன்பாட்டைத் தந்தால் பலனுள்ளதாக இருக்கும் என்று இரண்டு மூன்று வாய்ப்புகளைப் பிடித்தோம்.

ஆரம்பப் பணிகள்

தோல் வாங்குபவர்களும் விற்பவர்களும் தமது ஆர்டர்களை, விற்பனை விபரங்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதியைச் உருவாக்கினோம்.
  • ஒரு தோல் நிறுவனம் தமது வாடிக்கையாளர் தேவை விபரங்களை உள்ளிட்டு, அதன் தொடர்பான உற்பத்தித் தகவல்கள், அதன் அடிப்படையில் அனுப்பி வைக்கும் தோலின் விபரங்கள் போன்றவற்றையும் உள்ளிடலாம்.
  • தோல் நிறுவனத்தின் மேலாளர்களும் ஊழியர்களும் தமக்குத் தேவையான அறிக்கைகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • என்னென்ன ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, குறிப்பிட்ட கால கட்டத்தில் என்னென்ன அனுப்பி வைத்தோம் போன்ற விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • தோல் வாங்குபவர்களுக்கும் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி தமக்குத் தேவையான, அனுமதிக்கப்பட்ட விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
  • வாடிக்கையாளர் உள் நுழைந்து தனது தேவை விபரங்களைக் குறிப்பிட்டு விட்டால் வேளியே மின்னஞ்சல் மூலமாகவே தொலை நகல் மூலமாகவே தனி தகவல் அனுப்பத் தேவையில்லை.
அடுத்தக் கட்டத்தில் இதே வாடிக்கையாளர் தான் தோல் வாங்கும் மற்ற நிறுவனங்களையும் மென்பொருள் சேவையில் சேர்த்து விட்டால், தனது தோல் வாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் கையாளலாம்.

மென்பொருளை ஒரு இணையக் கணினியில் நிறுவி யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு உருவாக்கித் தருகிறோம் அதற்கு மாதம் தோறும் சேவைக் கட்டணம் கொடுத்து விடுங்கள் என்பதுதான் திட்டம்.

நடைமுறை தேர்வுகள்

நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் இருக்கலாம் என்று பார்த்தோம்.

எங்கள் மென்பொருளுக்கு பயனர் இடைமுகமாக இணைய உலாவியைப் (web browser) பயன்படுத்துகிறோம். 2000ம் ஆண்டிலேயே இணையத்தின் மூலமாக சேவைகள் வழங்குவது சூடுபிடிக்கும் காலத்துக்கு முன்பே எங்களுக்கு இது போன்று எந்தக் கணினியிலும் போய் நமது பயன்பாட்டை இயக்க முயலும் வசதி கவர்ச்சியாக இருந்தது.

நமது மென்பொருளை இயக்க ஒரே ஒரு கணினி மட்டும் இருந்தால் மற்ற கணினிகள் வலைப்பின்னல் மூலம் இணைந்து கொள்ளலாம். இயங்குதளம் (OS), கணிமொழியை(Programming Language) ஒரே கணினியில் நி'றுவிக் கொண்டால் போதும். பயனர் கணினிகளில் அவர்களுக்குப் பிடித்த இயங்குதளம் போட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு இணைய உலாவி மட்டும் இருந்தால் போதும்.

இப்படி யோசித்து எச்டிஎம்எல் (html) எனப்படும் மீயுரை கணிமொழியை உலாவிக்கு அனுப்பி இடைமுகம் காட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தோம். பின் ஆண்டுகளில் அந்தத் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்து இப்போது பல வசதிகளை இணைய உலாவி மூலமாகவும் கொடுக்க முடிகிறது.

தரவுத் தளமும் (database) இயங்குதளமும்(OS) திறவூற்று (open source) மென்பொருளாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆரக்கிள் தரவுத் தளம் அல்லது மைக்ரோசாப்டு எஸ்கியூஎல் தரவுத் தளம் என்று போனால் வாடிக்கையாளர்கள் அந்த மென்பொருட்களின் உரிமம் வாங்கவும் தனியாகக் காசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

இயங்கு தளத்தைப் பொறுத்த வரை இணையத்தின் மூலம் இந்தப் பயன்பாடு இயங்க வேண்டியிருப்பதால் லினக்சுதான் பாதுகாப்பு, நம்பகத்தன்மை அடிப்படையில் பொருத்தமானது என்று முடிவு செய்தோம்.

தரவுத் தளத்தையும் பயனர் இடைமுகத்தையும் இணைக்கும் நடு அடுக்குக்கு, அப்பச்சே இணைய வழங்கியுடன் இணைந்த பிஎச்பி என்று கணிநிரல் மொழியை தேர்ந்தெடுத்தோம். இந்தத் தேர்வு கொஞ்சம் பலவீனமான ஒன்றுதான். ஆனால் மென்பொருள் பின்னணி இல்லாத யாரும் ஆரம்ப காலத்தில் இல்லாததால், உள்ளதில் எளிதாக நிரல் எழுத முடியும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

லெதர்லிங்க் எனப்படும் தோல்இணை பயன்பாட்டின் நம்பகத்தன்மை, நிலைத்தன்மை போன்றவற்றுக்கு அடிப்படையாக ஏற்படுத்திய தரவுத் தள வடிவமைப்பு (database design) காரணமாக இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் வழி முறைகள்

இந்த வடிவமைப்புக் கூறுகளை வரையறுத்தல் இரண்டாவது படி.

நுட்பவரையறை ஆவணம் (technical documentation) என்ற ஆவணத்தில்
  • பணியின் நோக்கம் என்ன,
  • எந்த முறையில் இதை உருவாக்கப் போகிறோம்,
  • தரவுத் தளத்தை எப்படி வடிவமைக்க வேண்டும்,
  • இடைமொழியை எப்படி எழுத வேண்டும்,
  • இவ்வளவும் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும்
என்ற திட்டமிடல்களையும் வடிவமைப்புகளையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

இதை எழுதி முடித்தவர் தனது அணியின் இன்னொரு உறுப்பினரிடம் அதைக் காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கும் நிரல் எழுதுவதை ஆரம்பிக்கும் முன்னரே நன்கு சிந்தித்து எழுதி வைத்துக் கொள்வதால் பின்னால் நேர விரயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். வேலையில் இறங்கிய பிறகு மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கான தேவையைக் குறைப்பதுதான் இதன் நோக்கம்.

இப்படி வடிவமைத்த திட்டமிட்ட மென்பொருளை உருவாக்கிய பிறகு அதை எப்படி எப்படி சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வரையறுக்க வேண்டும், இது மூன்றாவது படி. இந்த சோதனை வழிகள் ஆவணத்தின் (Test Cases Document) அடிப்படையில்தான் சோதனை அணியினர் (Testing Team) உருவாக்கிய மென்பொருளை சரி பார்ப்பார்கள்.

புதிய தேவையைப் புரிந்து வடிவமைத்து வல்லுனருக்குத்தான் இதை இப்படியெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். அவரே அதையும் குறிப்பிட்டு விடுவது பொருத்தமாக இருக்கிறது.

நான்காவதாக, நிரல் எழுதுவது.

ஒரு மென்பொருள் உருவாக்கலில் இந்த நிரல் எழுதுவதின் பங்கு 20-30 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என்று எனது மதிப்பீடு. இந்த 20-30% மதிப்புக் குறைந்த பணிகள் செய்வதற்குத்தான் ஜாவா, டாட்நெட், விபி என்று சுற்றிக் கொண்டிருக்க நேர்கிறது.

ஐந்தாவதாக எழுதிய நிரலை சரி பார்த்து சோதனை அணியிடம் ஒப்படைப்பது. அவர்கள் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கும் சோதனை வழிகளை அடிப்படையாகக் கொண்டு எல்லா திசைகளிலும் சோதித்துப் பார்ப்பார்கள். இங்கு ஏதாவது பிரச்சனை வெளியே வந்தால் அது நிரல் எழுதியவரிடம் திரும்பிப் போய் சரி செய்யப்பட வேண்டும். மென்பொருள் வடிவமைப்பிலேயே பிரச்சனை இருந்தால் அதைக் கூட மாற்றி அமைக்க வேண்டியிருக்கலாம்.

ஐந்தாவது படியான தர நிர்ணயத்திலேயே (Quality Control), எழுதப்பட்ட நிரலை சக பணியாளர் படித்து விமரிசனம் செய்யும் நிரல் விமரிசனம் (Code Review) என்பதும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

கடைசியாக தேவையை ஆரம்பித்து வைத்தவர் இந்த இறுதி வெளிப்பாட்டைப் பார்த்து தனது ஒப்புதலை அளிக்கிறார்.

சமையல் முடிந்து விட்டது, சாப்பாடு தயார். சாப்பிட வைக்க வேண்டுமே. தயாரான நிரல்களை, மாற்றங்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு போய் நிறுவுதல், அங்கு பயனர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்கள் கேட்கும் மாற்றங்களைக் குறித்துக் கொள்ளுதல், அவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் அளித்தல் போன்ற செயல்படுத்தல் மிகப் பெரிய பங்கு.

அதைத் தொடர்ந்து வாடிக்கையாளரிடம் இறுதி விளைவை, நன்மைகளை ஏற்கனவே பேசியிருந்தபடி காண்பித்து காசைக் கையில் வாங்குவதோடு பணி முடிகிறது.

மூன்று முகங்கள்

இது போன்ற நிவதி மென்பொருளில் மூன்று அடுக்குகள் (layers) இருக்கும்.
  • விபரங்களை உள்ளிட படிவங்கள், விபரங்களை அறிக்கைகளாகப் பார்க்கும் பக்கங்கள் அடங்கிய பயனர் இடைமுகம் (User Interface).
  • உள்ளிட்ட விபரங்களைச் சேமித்து வைத்து, தேவைப்படும் போது வெளியே கொடுக்கும் தரவுத் தளம் (Database).
  • இரண்டையும் இணைக்கும் வண்ணம், படிவங்களிலிருந்து தரவுகளை எடுத்து தரவுத் தளத்தில் போடுவது, தரவுத் தளத்திலிருந்து தேவையான வடிவில் தகவல்களைத் திரட்டி இடைமுகத்துக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்யும் ஒரு இடைபயன்முகம். (Application Layer)
வாடிக்கையாளரிடம் ஒப்புதல் வாங்குவதற்கு பயனர் இடைமுக மாதிரிகளைக் காண்பித்தால் போதுமானது.

அடுத்ததாக,
  • அந்த தகவல்களை எப்படி சேமிக்கப் போகிறோம்,
  • எப்படி வெளியே எடுக்கப் போகிறோம்,
  • என்னென்ன காரண காரியங்களின் (logic) அடிப்படையில் இயக்கப் போகிறோம்
போன்ற வழிமுறைகளில் பெருமளவு நேரம் செலவளித்தால்தான் மென்பொருளின் பயன்பாட்டு நன்மையும் எளிமையும் சிறப்பாக அமையும்.

பொதுவாக விபி (VB) போன்ற பொம்மை இடைமுக மென்பொருள் உருவாக்க முறையில் (GUI development tools) படிவத்தில் என்ன வரிசையில் தகவல்கள் வாங்கப்படுகின்றனவோ அதே அடிப்படையில் தரவுத் தளத்தில் சேமித்துக் கொள்ளும் போக்கு சோம்பேறி மென்பொருள் நிரலர்களிடம் (programmers) இருக்கும்.

  • பயனருக்கு எப்படிக் காண்பித்தால் வசதியாக இருக்கும் என்பதைப் பொறுத்து பயனர் இடைமுகம் அமைய வேண்டும்.
  • தரவுத் தளத்தில் எப்படிச் சேமித்து வைத்தால், தகவல் இழப்பு, பலமுறை ஒரே தகவல் சேமிப்பு இல்லாமல் மிகக் குறைந்த முயற்சியில் உள்ளிடுதலும், சேமித்தலும் வெளி எடுத்து காட்டுதலும் செய்ய முடியும் என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்பு அமைய வேண்டும்.
  • எந்த வழிமுறையில் வேகமாக, குறைந்த கணினி ஆற்றலைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளே அனுப்பவும், வெளியே எடுக்கவும் என்பதைப் பொறுத்து இடைபயன்முகம் அமைய வேண்டும்.

எதுக்காக எல்லாம்

மென்பொருள் உருவாக்கும் போது சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

(இப்படித்தான் என்றில்லாமல் இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. ஆனால் நிறுவனம் ஒன்றில் தொழில் முறையாக மென்பொருள் உருவாக்கும் போது இந்த ஒழுக்கங்கள் உதவுகின்றன என்று அனுபவம்.)

முதலில் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை
  • வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதாலோ
  • அல்லது விற்பனைப் பிரிவினர் சொல்லும் ஆலோசனையின் அடிப்படையிலோ
  • அல்லது நிறுவனத்தில் துறையின் போக்கு புரிந்த ஒருவரின் பரிந்துரையாலோ
ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரே வாடிக்கையாளருக்குச் செய்து மென்பொருளை அவருக்கே கொடுத்து விடுவது project எனப்படும் குத்தகை வேலை முறை.

ஒரு மென்பொருளை உருவாக்கி பல வாடிக்கையாளருக்கு விற்று, அது தொடர்பான சேவைகளையும் வழங்குவது product எனப்படும் மென்பொருள் உருவாக்கி விற்கும் வேலை முறை.

எங்களுடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெருமளவு சிறு குறு நிறுவனங்கள். லட்சக் கணக்கில் பணமும் நேரமும் செலவழித்து மென்பொருள் தேவையை விளக்குவதில் கூட ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதனால், ஆரம்ப காலத்தில், புதிய கூறுகள் எங்கள் திட்டத்தின் பேரில் உருவாக்கப்பட்டன. முதல் வாடிக்கையாளர் கிடைத்த பிறகு அவர்கள் கேட்கும் தேவைகளை உருவாக்கிக் கொடுத்து மேம்படுத்திக் கொண்டோம். நான்கைந்து வாடிக்கையாளர்களுக்கு பணி செய்யும் போது எல்லோருக்கும் பொதுவில் உருவாக்கி பொருளை மேம்படுத்த முயன்றோம்.

தேவையை வரையறுக்க,
  • எப்படிப்பட்ட விபரங்களை உள்வாங்க வேண்டும் என்பதற்கான படிவங்களின் மாதிரிகள் (form templates),
  • எப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக வேண்டும் என்று மாதிரிகள் (report templates),
  • என்னென்ன ஆவணங்கள் அச்செடுக்க வேண்டும் என்று மாதிரிகள் (document templates)
உருவாக்கிக் கொள்ளுவது உத்தமம்.

முதலில் யார் அந்தத் தேவையை கிளப்பினார்களோ அவருக்கு இந்த மாதிரிகளைக் காட்டி,
'இதுதானே நீங்கள் கேட்டது' என்று உறுதி செய்து கொண்டால் பின்னர் மறு வேலைகள், நேர விரயங்களைத் குறைத்துக் கொள்ளலாம். .

சின்னச் சின்ன மாறுதல்களில் கூட இப்படி மாதிரிகளில் படமாகக் காட்டும் போது சொன்னவர் சொன்ன நோக்கும் கேட்டவர் புரிந்த நோக்கும் வெவ்வேறாக இருப்பது வெளி வந்து விடுகிறது. அப்போதே புரிதலை சரி செய்து கொண்டு விட்டால், பின்னர் முழுமையாக வடிவமைத்து நிரல் எழுதிய பிறகு மாற்றங்களைச் செய்யும் விரயத்தைத் குறைத்து விடலாம்.

இந்த முதல் அடியை இறுதிவெளிப்பாடு வரையறை ஆவணம் (functional specification) என்று குறிப்பிடுகிறோம் (இவெவ).