வெள்ளி, 22 ஜூன், 2012

நல்ல ஊழியர்களுக்கு ஏன் மோசமான வேலைகள் கிடைக்கின்றன (அல்லது வேலையே கிடைப்பதில்லை)


"நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் ஏன் கிடைப்பதில்லை" என்ற கட்டுரை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த அக்டோபரில் (2011) வெளியானது. மூன்று தலைமுறைகளில் பார்த்திராத பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடிக்கணக்கான படித்த, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழலிலும் நிறுவனங்கள் திறமை படைத்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சொல்கின்றன. 

பொருத்தமான கல்வியை வழங்காத கல்வி நிலையங்களையும், புலம் பெயரும் ஊழியர்களை போதுமான அளவு அனுமதிக்காத அரசாங்கத்தையும் பழிப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலைகளில் சேர மறுக்கும் ஊழியர்களையும் குறை சொல்கின்றன நிறுவனங்கள்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் வேலை வாய்ப்பு மற்றும் மேலாண்மை துறைகளில் நிபுணரான பீட்டர் கேப்பல்லி. 'நிறுவனங்கள் அனைத்தும் திறமைக் குறைவு பற்றி ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதற்கான ஆதாரங்கள்  இல்லை' என்று முடித்திருந்தார்.  


'உண்மையில் குறை சொல்லப்பட வேண்டியவை வேலை கொடுக்கும் நிறுவனங்கள்தான்' என்பது அவரது முடிவு. 

அவருடனான ஒரு நேர்முகத்தை இங்கு படிக்கலாம்.  திறமை குறைவுகள் என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக