வியாழன், 28 ஜூன், 2012

சிலிக்கன் பள்ளத்தாக்கும் சுரண்டலைஆரம்பித்து விட்டது


"பில் டேவிடோ சிலிக்கன் பள்ளத்தாக்கின் பழம் பெரும் பார்வையாளர். சிலிக்கன் பள்ளத்தாக்கு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எழுதும் போது, டேவிடோ பெருமைப்படும்படியாக எதுவும் இல்லை என்கிறார். பேஸ்புக், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களை கடும் சொற்களால் தாக்குகிறார். 


'ஜெயித்தவனுக்குத்தான் எல்லாமே என்ற சூழலில் மேலும் மேலும் பணத்தைத் துரத்தும் நிறுவன உரிமையாளர்கள், ஏற்றுக் கொள்ளப்படும் நடத்தையின் விளிம்பில் நடனமாடுகிறார்கள். அவர்கள் விளிம்பிற்கு கொண்டு போகவில்லை என்றால் போட்டியாளர் அதைச் செய்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார். ஏகபோகம் போட்டியாளர் கையில் போய் விடும். இப்படிக் கிடைப்பதுதான் பயனரை சுரண்டி கிடைக்கும் மதிப்பு"



இப்போது ஏன் இந்த மாற்றம் என்று ஆராயும் போது 'முன்பெல்லாம் பெரிய, கறாரான பெரு நிறுவனங்களுடன் உறவாடும் போது சப்ளையர்கள் நேர்மையாக இருந்தார்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்துக்கு விற்றார்கள். வாங்கும் மேலாளர்கள் அதிகாரமும், மறந்து விடாத நினைவுத் திறனும் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரின் நம்பிக்கையை பொய்ப்பித்தால், கடுமையாக தண்டிக்கப்பட்டு வியாபாரத்திலிருந்தே வெட்டி விடப்படுவார்கள். அதுதான் அவர்களை நேர்மையாக நடக்க வைத்தது' என்கிறார் டேவிடோ.

இப்போது நிலைமை மாறி விட்டது. தனிநபர் நுகர்வோரை சுரண்டுவதால் எதிர்மறை பின்விளைவுகளை விட ஆதாயம் அதிகம் கிடைக்கிறது.


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக