ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள்.
- வேலைக்கு ஆள் வைத்து அவர்களுக்கு தேவையான கருவிகள், கணினிகள் கொடுத்து, சம்பளம் கொடுத்து மென்பொருள் உருவாக்குகிறீர்கள்.
- அந்த மென்பொருளை நீங்கள் வெளியிட்ட அடுத்த நாளே நகலெடுத்து உங்களுடைய நிறுவனத்தின் பெயரை, படங்களை மட்டும் நீக்கி விட்டு வேறு ஒரு அமைப்பு விற்க முடிகிறது.
- வேண்டுமென்றால் போட்டி நிறுவனம் கூட உங்கள் மென்பொருளை எடுத்து உங்கள் பெயரை நீக்கி விட்டுத் தமது பெயரைச் சேர்த்து விற்றுக் கொள்ளலாம்.
இது போல தொழில் நடத்தும் ஒரு நிறுவனத்துக்கு பிப்ரவரியில் 2009ல் முடிந்த நிதியாண்டில் நிதி நிலவரம்:
1. வருமானம் - $652 மில்லியன்
2. மொத்த ஆதாயம் - $546 மில்லியன்
3. நிகர ஆதாயம் - $78 மில்லியன்
செய்த பொருளை போட்டியாளருக்கு சும்மா கொடுத்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்கிறார்கள். சுமார் 350 கோடி ரூபாய்கள் ஆதாயம் சம்பாதிக்கிறார்கள். எது இந்த நிறுவனம்?
ரெட்ஹாட் (சிவப்புத்தொப்பி) என்ற வட அமெரிக்க நிறுவனம்தான் அது. அது பற்றிய மேல் விபரங்களை இங்கு போய் பாருங்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது?
திறவூற்று மென்பொருள் என்ற இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் தகவல் தொடர்பு துறையில் நடந்த புரட்சி இயக்கத்தின் விளைவுதான் இந்த நிறுவனம். இதைப் போல நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், தனி நபர்களும் மென்பொருள் துறையை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக